அதுக்கு என்ன வென பண்ணலாம்

அன்று காலை தூக்கத்தில் இருந்து எழுந்து மணியை பார்த்தேன் மணி ஏழு, எழுந்து ஹாலுக்கு வந்தேன் , அம்மாவிற்கு ஃபோன் பண்ணினேன் மறுமுனையில் அம்மா போனை எடுத்தார் ” நாங்கள் ஈவினிங் அண்ணன் ஊருக்கு சென்று விடுகிறோம் நீ வந்துவிடு தாமதமாக்க வேண்டாம் என்று கூறினார் சரி என்று போனை வைத்தேன்”எங்கள் ஊர் கோயம்புத்தூர் அருகில் உள்ள கிராமம்,நான் படித்தது எல்லாம் நகரத்திலே அதனால் ஊருக்கும் எனக்கும் அவ்வளவாக தொடர்பு இல்லை எப்பவாவது லீவுக்கு செல்வதோடு சரி, என் மாமாவின் ஊர் அதிலிருந்து ஒரு 30 கிலோமீட்டர்,
நான் பாத்ரூம் சென்று காலை கடன்களை முடித்துவிட்டு , உடையை மாற்றிக் கொண்டு மருத்துவமனை செல்ல தயார் ஆனேன், கோவையில் இருக்கும் என் நண்பன் டாக்டர் அசோக்கிற்கு போன் பண்ணி 4:00 மணிக்கு கோவை வருவதாகவும், அதன் பின் மாமா ஊருக்கு செல்வதாகவும் கூறினேன், என்ன மாமா வீட்டிற்கு,,! என்று கேட்டான், மாமா மகளை பெண் பார்ப்பதற்காக செல்கிறேன் என்று கூறினேன் “வாழ்த்துக்கள்” என்று சொன்னான்,அதன் விவரங்களை பின்பு சொல்கிறேன் என்று பதில் சொல்லி முடிப்பதற்குள்,அவன் வீட்டிற்கு வரும்படி அழைத்தான், ஆனால் இப்போது முடியாது இன்னொரு நாள் வருகிறேன் என்று சொன்னேன், சரி ஏர்போர்ட்டுக்கு காரை அனுப்பி வைக்கிறேன் என்றான், நான் இல்லை கேப் புக் பண்ணிக் கொள்கிறேன் என்று சொன்னேன்,அவன் வற்புறுத்தலை என்னால் மறுக்க முடியவில்லை. சரி என்றேன், என் பெயர் மாறன் நான் ஒரு ஹார்ட் ஸ்பெசலிஸ்ட் விரல் விட்டு சொல்ல கூடிய தலை சிறந்த மருத்துவர்களில் நானும் ஒருவன் என்று நினைக்கிறேன்,
எனது ஜாக்குவார் கார் மருத்துவமனை நோக்கி கிளம்பியது அங்கு சென்று நோயாளிகளை பார்த்துவிட்டு , எனது ஜூனியர் டாக்டர்களுக்கு நோயாளிகளின் பற்றி விளக்கத்தை கொடுத்துவிட்டு, நான் எம் டி ஐ சந்திக்க சென்றேன், எம் டி தங்கவேல் 65 வயது பெரியவர் என் மேல் அதிக அன்பும் பாசமும் கொண்டவர், நான் அவரிடம் கோவை செல்வதாகவும் அதற்கான காரணத்தையும், நாளை காலை வந்து விடுவேன் என்று கூறினேன் “வாழ்த்துக்கள் என்று சொன்னார்”, நன்றி என்று கூறிவிட்டு கிளம்பினேன்
மாலை 4 மணி கோவை விமான நிலையத்தை விட்டு வெளியே வந்து , மொபைலை எடுத்து என் நண்பர் அனுப்பிய நம்பருக்கு கால் செய்ய நினைத்தபோது, ஒருவர் என்னையே கவனித்துக் கொண்டு என்னிடம் வந்து டாக்டர் மாறன் சார் நீங்கள் தானே என்று கேட்டார். நான் ஆம் என்று கூறியவுடன் உங்களுக்கான வண்டி வெளியே காத்துக் கொண்டிருக்கிறது என்று கூறினார் நான் அவருடன் வண்டியை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
வண்டியில் ஏறி அமர்ந்த உடன் வண்டி கிளம்பியது. என் வயது 30,ஆறடி உயரம், கர்லிங் ஹேர், புது நிறம்,பிரெஞ்சு தாடி,ஆறடி உயரத்திற்கு ஏற்ற உடல்வாகு இதுதான் நான், அப்பா பெயர் மகேந்திரன் ரிட்டயர்டு ப்ரொபசர், அம்மா சாந்தி ஹவுஸ் வைஃப், மாமா ராமசாமி அத்தை சுமதி, மாமா மகன் ரகு,மகள் மலர் இப்போது பார்க்க போகும் பெண் மலர் தான் வயது 25.
நான் அந்த ஊரின் பெயர் சொல்லி அங்கு போக வேண்டும் என்று கூறினேன், சரி என்று சொன்னார் டிரைவர், ரிங் ஆனது எடுத்துப் பார்த்தேன் என் அம்மா தான், ஆன் பண்ணி பேச ஆரம்பித்தேன் , “ஏன் இவ்வளவு நேரம், சீக்கிரமாக வர மாட்டாயா? என்று சிறிதாக கோபப்பட்டார்”,நான் இதோ வண்டியில் வந்து கொண்டிருக்கிறேன் என்று கூறினேன் சரி என்று போனை கட் பண்ணினார், ஒரு நாள் லீவு கிடைப்பது பெரிய கஷ்டமாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டே, இருந்தாலும் இந்த மருத்துவ தொழில் எனக்கு பிடித்திருக்கிறது என்னால் காப்பாற்றப்படும் உயிர்களை நினைத்து நான் மகிழ்ச்சி அடைந்தேன்.

பெண் என் தாய் மாமன் மகள் தான் , நான் மட்டும் காதலித்த என் 15 வருட காதலி , இத்தனை நாள் வரை நான் அவளை பார்த்தது கூட கிடையாது எப்படி இருப்பாள் கருப்பா சிவப்பா என்று கூட தெரியாது , நகரத்தை விட்டு கிராமத்தை நோக்கி வர வர கிராமத்து உணர்வை நான் அனுபவிக்க ஆரம்பித்தேன், அருமையான காற்று, இயற்கையான சூழல்,இரைச்சல் இல்லாத இடம் என்னை
வெகுவாக கவர்ந்தது,நான் வழியை
காண்பித்து டிரைவரிடம் சொல்ல கரெக்டாக மாலை 5 மணிக்கு அந்த வீட்டின் முன் நிறுத்தினார், பெரிய காம்பவுண்ட், அந்த ஊரிலேயே பெரிய வீடு, பழைய காலத்து வீடு , கார் வந்து நின்ற சத்தம் கேட்டவுடன் வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்தார்கள் , மாமா ராமசாமி, அத்தை சுமதி முகம் மலர்ச்சியுடன் என்னை வரவேற்றார்கள் ,” மாமா என்னை பார்த்து உயரமாக வளர்ந்து விட்டான்,சிறு வயதில் பார்த்தது, தங்கை மற்றும் அத்தானை மட்டுமே அதிகமாக பார்க்க முடிந்தது, எப்பொழுது கேட்டாலும் படித்துக் கொண்டிருக்கிறான் என்று சொல்வீர்கள், இருபது வருடங்களுக்கு பிறகு இப்பொழுது தான் பார்க்கிறேன் , அம்மா கொஞ்சம் நேரத்தோட வரக்கூடாதா என்று கேட்டார் நான் அம்மா விடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே மாமாவின் பையன் ரகு வணக்கம் தெரிவித்தான் நானும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்து கொண்டு என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டேன், பி.இ பைனல் இயர் படித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னான், நானும் சரி என்று சொல்லிவிட்டு சோபாவில் அமர்ந்தேன்,
மாமா என்னிடம் “உங்கள நினைச்சா எனக்கு பெருமையா இருக்கு, உங்கள் பெயரை சொன்னாலே எல்லாத்துக்கும் தெரியுது மாப்பிள்ளை, என் தங்கச்சி பையன் என்பது எனக்கு இன்னும் பெருமை, நீங்கள் சிறு வயதாய் இருக்கும்போது லீவுக்கு வரும்போது இங்குதான் விளையாடுவீர்கள் ஞாபகம் இருக்கா?”எனக்கு அரைகுறையாக ஞாபகம் இருக்கிறது மாமா, “நீங்கள் இந்த வீட்டிற்கு மருமகனாக வந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன் என்று கூறினார் “, அதற்குள் என் அம்மா இடைமறித்து “என் பையன் நான் சொல்ற எதையுமே தட்ட மாட்டான்”,அதே சமயம் மாமா அப்படி சொல்லவில்லை அமைதியாய் இருந்தார்.
விவசாயம் எப்படி மாமா உள்ளது என்று கேட்டேன் “இந்த ஊரிலேயே நிலங்கள் நமக்கு தான் அதிகம் நாம் தான் இந்த ஊரிலேயே பரம்பரை பரம்பரையாக வசதியானவர் என்று சொன்னார்”.
நான் அம்மாவிடம் மெதுவாக கண்ணை காண்பித்தேன் அம்மாவும் புரிந்து கொண்டு “பெண்ணை வரச் சொல்லலாமா என்று கேட்டார்”, மாமா உள்ளே குரல் கொடுத்து அத்தையிடம் “ஏம்மா ரெடியா என்று கேட்டார் அத்தை இதோ இரண்டு நிமிடம் என்று பதில் சொன்னார்”, எனக்கு ஒரு மாதிரி படபடப்பாகவே இருந்தது, முதல் முறை ஹார்ட் ஆப்ரேஷன் செய்த பொழுது இல்லாத படபடப்பு இப்போது இருந்தது, இரண்டு நிமிடம் இரண்டு யுகமாக தோன்றியது!
சிறிது நேரத்தில் பெண் தன் அறையை விட்டு வெளியே வந்தால், நான் அவளைப் பார்த்தேன், பச்சை கலர் சேலையில் வயிறு தெரியாமல் மேலே ஏற்றி கட்டி இருந்தால், அளவான மேக்கப்புடன் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தாள், நான் அண்ணாந்து அவளுடைய முகத்தை பார்த்தேன் மொத்தத்தில் தேவதை போல் இருந்தால், நல்ல கலர், நான் அவளில் பாதி கலர் தான், முடி சுருட்டையாக இருந்தது, நெற்றியில் சரியான அளவில் ஸ்டிக்கர் பொட்டு வைத்திருந்தால் அதன் கீழே புருவம் அடர்த்தியாக தெரிந்தது , அது கண்கள் அல்ல கவி பேசும் விழிகள், மூக்கு எடுப்பாக இருந்தது, கன்னத்தில் அளவான சதை பிடிப்பு தெரிந்தது, லூஸ் ஹேர் அதன் மேலே ஒரு கிளிப்,அதில் மல்லிகைப் பூ சூடி இருந்தால், உயரம் 5.7 இருக்கும் அவள் அழகியல்ல!பேரழகி , நான் என்னை இழந்தேன், என் மனம் என்னிடம் இல்லை, நான் என்னை கட்டுப்படுத்திக் கொண்டு மாப்பிள்ளை தோரணையுடன் இருந்தேன், அளவான மேக்கப் உடன் அதீத ஒளியுடன் அவள் முகம் வசீகரா தோற்றத்துடன், ஒரு மெல்லிய புன்னகை, இந்த புன்னகை இயற்கையாகவே அவள் முகத்தில் இருக்க வேண்டும் அப்படித்தான் எனக்கு தோன்றியது அது செயற்கையாக எனக்கு படவில்லை, அருகில் வந்தவள் என் அப்பா அம்மாவுக்கு கைகளை கூப்பி “வணக்கம் மாமா, வணக்கம் அத்தை என்று சொன்னால்”, பதிலுக்கு அம்மா அப்பாவும் அம்மாவும் வணக்கம் சொன்னார்கள்.பெண் அவர்கள் அம்மாவிடம் டம்ளர்கள் இருந்த அந்த தட்டை வாங்கி அருகில் வந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று என் அப்பாவிடம், அம்மாவிடம் கூறினாள், அதிலிருந்து அப்பாவு, அம்மாவும் எடுத்துக் கொண்டார்கள், என்னிடம் மெதுவாக நடந்து வந்து என்னை பார்த்தால், அவளை நிமிர்ந்து பார்த்தேன், மற்றவர்களுக்கு தெரியாமல் ஒரு சிரிப்பு சிரித்தால், என்னிடம் தட்டை நீட்டினால் நான் அதிலிருந்து ஒரு டம்ளர் எடுத்துக் கொண்டேன், நான் எதிர்பார்த்த எண்ணத்தை அம்மா தானே சொல்ல ஆரம்பித்தால் சோபாவை காண்பித்து மருமகளே இப்படி உட்கார் என்று சொன்னார்,தட்டை வைத்துவிட்டு உட்கார்ந்தால், நான் இப்போது முழுமையாக பார்த்தேன், மிகவும் அழகாய் தான் இருந்தால், சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்து படபடவென்று இருந்தது உண்மையில் இந்தப் பெண் அமைந்தால் என்னை விட அதிர்ஷ்டசாலி இந்த உலகில் யாரும் இருக்க முடியாது என்று எண்ணினேன், அவள் என்னை பார்த்தும் பார்க்காத மாதிரி பார்த்தால்,,பெண் அத்தை சுமதியை கூப்பிட்டு காதில் ஏதோ சொன்னால்,அத்தை அவளை சிறிதாக முறைத்து விட்டு” இரு கேட்கிறேன் என்று கூறினார்கள்” ,” இரு கேட்கிறேன்” என்பது சிறிது சத்தம்மாக கேட்டது இதற்குள் என் அம்மா என்ன என்று என் அத்தை இடம் கேட்டார்கள், அதற்கு அத்தை” இவள் சிறிது மாப்பிள்ளை இடம் பேச வேண்டும் என்று சொல்கிறாள், இந்த காலத்தில் எல்லாமே மாறி போயிருக்கிறது அந்த காலத்தில் வேறு”,என் அம்மா இதில் என்ன இருக்கிறது “இருவரும் அத்தை பிள்ளை மாமா பிள்ளை தானே,தாராளமாக என்று கூறினார், எதை நான் எதிர்பார்த்தேனோ அதை அவளே கேட்டு விட்டாள் நல்லதாக போய்விட்டது,நான் கேட்டிருந்தால் எங்க அப்பா முடியாது, முடியாது என்று கூறி இருப்பார். நல்ல வேலை, பெண் தன் தம்பியை அருகில் அழைத்து காதில் ஏதோ சொன்னால் சரி என்று தம்பி தலையாட்டினான். பின் அவள் எழுந்து மாடிப்படி நோக்கி சென்றாள் அவள் நடையில் ஒரு ஒரு நளினம் இருந்தது
அவளின் தம்பி என் அருகில் வந்து மாமா வாங்க என்று சொன்னான் , நான் என் அப்பா, அம்மாவை பார்த்து தலையை அசைத்து பேசி விட்டு வருகிறேன் என்று அவன் பின்னால் சென்றேன் ,அவன் அக்கா மேலே மாடியில் தான் இருக்காங்க பேசுங்க என்று கூறிவிட்டு மாடியில் இருந்து திரும்பி இறங்கி போய் விட்டான்,நான் எத்தனையோ பெண்களை ஆஸ்பத்திரியில், படிக்கும் போது கல்லூரியில் பார்த்திருக்கிறேன் ஆனால் இவளை போல் ஒரு பெண்ணை நான் இதுவரை பார்த்ததில்லை, இது எனக்குத்தான் தோன்றுகிறதா இல்லையோ தெரியவில்லை, மாடி ஏரி வந்தவுடன் அவள் தலையில் இருந்த மல்லிகை பூவின் மனம் என்னை ஏதோ செய்தது, தலையை தூக்கி நிமிர்ந்து பார்ப்பதற்குள் ,மலர் “சிறிதாக சிரித்துக் கொண்டு வாங்க மாப்பிள்ளை சார் என்று சிறிது சத்தமாக அழைத்தால் , நான் அவள் பேச்சில் நிலை குலைந்தேன், இவ்வாறு பேசுவது படபடப்பு அதிகமானது , பின்னால் திரும்பி பார்த்தேன் யாராவது இருக்கிறார்களா என்று, சிரித்துவிட்டால் “நீங்கள் தானே மாப்பிள்ளை பின்னாடி திரும்பி பாக்குறீங்க என்று நக்கலாகவே கேட்டால்”நான் உள்ளுக்குள் அவளுடைய செய்கையை வெகுவாக ரசித்தேன் . இந்த வெகுளியாக பேச்சு என்னை என்னை மறக்க செய்தது, தனியாக இருந்ததினால் நான் அவளை கீழே காலில் இருந்து ஆரம்பித்து மெதுவாக மேலே அவள் கண்கள் வரை பார்த்தேன், தங்கச் சிலை போல தெரிந்தால், என்னை கட்டுப்படுத்திக் கொண்டு,ஏதோ பேசணும் என்று சொன்னீர்கள் என்று நான் ஆரம்பித்தேன் உம் … என்று சொன்னால் உங்களை பற்றி சொல்லுங்கள் என்றால்,இல்லை நீங்கள் சொல்லுங்கள் என்று கூறினேன்” அது என்ன நீங்கள் “என் பெயர் தெரியுமா உங்களுக்கு ?” மலர்” என்று சொன்னேன், பரவாயில்லை என் பெயரை தெரிந்து கொண்டு அப்புறம் ஏன் நீங்கள்”? “சொல்லு மலர் என்றே சொல்லியிருக்கலாமே நீங்கள் என்றால் முன்பின் தெரியாத ஆள் போல் தெரிகிறது, நாம் இருவருக்கும் திருமணம் முடிகிறதோ இல்லையோ நீங்கள் என் அத்தை மகன் அந்த உரிமையில் கூட நீ,வா,போ என்று என்னை அழைக்கலாம் ” “சரி மலர்”என்று சொன்னேன் ,சிரித்தாள் “ரிலாக்ஸாக இருங்கள் உங்களிடம் படபடப்பு தெரிகிறது என்று சொன்னாள்” ஆமாம் இது எனக்கு முதல் முறை இது மாதிரி எனக்கு அனுபவம் இல்லை”,உடனே அவள் லைட்டாக சிரித்துக் கொண்டு ” எனக்கு காலை மாலை இதுதான் வேலை என்று நக்கலாக சொன்னால் , அதற்கு நான் இல்லை, இல்லை நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என வழிந்தேன், என்ன இப்படி பேச்சிலே காலை வாருகிறாள் என்று உள்ளுக்குள் ரசித்து கொண்டு இருந்தேன். அத்தனை ஆபரேஷன் பண்ணும் போது ஏற்படாத படபடப்பு இவளிடம் பேச ஆரம்பித்த உடன் ஏற்படுகிறது, சரி “சொல்லுங்கள் மாறா” என்று கூறினால் என்னது மாறவா?!! மாறன் தானே உங்கள் பெயர் என்று கேட்டால் ஆம் என்று தலையை மட்டும் அசைத்தேன், நான் அமைதியானவன்,அதிகமாக பேசமாட்டேன், பிடிக்கவில்லை என்றால் கடந்து சென்று விடுவேன், கடும் சொற்களால் பேசத் தெரியாது எனது
தொழில் எனக்கு முக்கியம் அதில் காப்பாற்றப்படும் உயிர்கள் எனக்கு பெருமை, என் அப்பா அம்மாவை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும், எந்த கெட்ட பழக்கங்களும் இதுவரை கிடையாது, அவசரம் கருதி இரவு பகல் எந்நேரம் வேண்டுமானாலும் மருத்துவமனைக்கு செல்ல நேரிடும், கடினமான உழைப்பினால் மட்டுமே இந்த பெயரை நான் பெற்றுள்ளேன்,என்னை புரிந்து கொண்டு என்னுடைய வளர்ச்சிக்கு பக்க பலமாக ஒரு துணையை எதிர்பார்க்கிறேன்,அவ்வளவுதான் வேறு சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று பேசத் தெரியாமல் ஒப்பித்தேன் ,
உன்னை பற்றி சொல் என்றேன்”அவள் சொல்ல ஆரம்பித்தான் நான் கொஞ்சம் மார்டன், ரொம்ப கிடையாது, நிறைய ப்ரொபோஸ் உண்டு ஆனால் நான் யாரையும் காதலித்தது கிடையாது, என் தம்பி என்றால் எனக்கு உயிர், கொஞ்சம் கலகலப்பு டைப் ,நான் இ ஆனால் இதற்கு நேர் எதிராக உங்களுடைய குணமாக தெரிகிறது,ரொம்ப அமைதி வாயை திறக்கவே யோசிக்கிறீர்கள், நீங்கள் சொல்லும் பதில்கள் தெளிவாகவும் எதார்த்தமாக உள்ளது , பார்க்கும்பொழுது கண்ணியமான மனிதராக தெரிகிறீர்கள்,நீங்கள் என்னை நன்றாக பார்த்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. உங்களைப் பற்றியோ உங்களுடைய தொழில் பற்றியோ எதுவும் எனக்கு தெரியாது.நீண்ட நேரம் நாம் பேசவில்லை சிறிது நேரம் தான் இருந்தாலும் ஒரு மரியாதையான நபராக தெரிகிறீர்கள், நான் எதற்கும் கவலைப்படும் நபர் அல்ல ஏமாற்றினால் எனக்கு சுத்தமாக பிடிக்காது,வாழ்க்கை அதன் போக்கிலே சந்தோஷமாக போகட்டும் என்கிற எண்ணம் எனக்கு உண்டு, நான் யோசித்து அப்பாவிடம் சொல்கிறேன் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுது படபடவென்ற மணம் அமைதியானது.சுற்றிலும் பார்த்தேன் இதயத்திற்கு இதமாக உள்ளது இந்த மாலை நேரத்து காற்று என்று கூறினேன், அதற்கு அவள் இதயம் இடப்பக்கம் உள்ளதா வலப்பக்கம் உள்ளதா என்று கேட்டால், அந்த இதயத்தில் நான் இருக்கிறேனா என்று மெதுவாக புன்னகைத்துக் கொண்டே கேட்டால்,15 வருடங்களாக அதில் இருக்கிறாய் என்று சொல்ல தெரியவில்லை , ஒரு சிரிப்புடன் அமைதியாக இருந்தேன்
கீழே இருந்து மாறா என்று ஒரு சத்தம் வந்தது அவளிடம் மொபைல் நம்பர் வாங்குவவோ அல்லது என்னுடைய மொபைல் நம்பரை அவளுக்கு கொடுக்கவோ எனக்கு துணிவு வரவில்லை, சாரி மலர் கீழே கூப்பிடுகிறார்கள் என்று கூறினேன்,சரி கீழே போகலாம் என்றால்.
நான் கீழே இறங்கி வந்தேன். பின்னாலே அவளும் வந்தால் திரும்பிப் பார்த்தேன்,இவள் என் வாழ்நாள் முழுவதும் என் கூட வந்தாள் எவ்வளவு இனிமையாக இருக்கும்,இவள் பேசும் பேச்சில் எவ்வளவு மனக் சுமை இருந்தாலும் கரைந்து விடும் என்று நினைத்தேன், என் மனம் என்னிடம் இல்லை!! வரும்பொழுது இப்படி ஒரு காதலியை எதிர்பார்த்து நான் இங்கு வரவில்லை, நாம் இவளை திருமணம் முடிக்கிறோமோ இல்லையோ ஆனால் நல்ல பெண் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும் என்று மனது நினைத்தது, எனக்கு கிடைக்க வேண்டும் என்ற ஏக்கமும் என்னுள் இருந்தது.
கீழே வந்த உடன் அப்பா அம்மாவை பார்த்து மெதுவாக சிரித்துவிட்டு அம்மா அருகில் அமர்ந்தேன், அவள் என்னை பார்த்து மெதுவாக சிரித்துவிட்டு,அவள் ரூமிற்கு சென்று விட்டாள், அம்மா பார்வையால் என்ன என்று கேட்டாள்,அம்மாவிடம் எனக்கு பெண்ணை பிடித்திருக்கிறது என்று காதில் சொன்னேன் , அம்மா என்னிடம் மலர் என்ன சொன்னாள் என்று என் காதில் கேட்டார்கள் நான் மீண்டும் காதில் அம்மாவிடம் யோசித்து சொல்கிறேன் என்று சொல்லிவிட்டால் என்று சொன்னேன், மாமா ” என்ன மாப்பிள்ளை மலரிடம் பேசினீர்களா” என்று கேட்டார் ஆம் என்றும் தலையசைத்தேன் “என்ன நினைக்கிறீர்கள் என்று அடுத்த கேள்வியை கேட்டார்” , அம்மா உடனே நான் அப்பவே சொன்னேன் இல்லையா மலரை கண்டிப்பாக பிடிக்கும் என்று , அவள் தான் இனி பதில் சொல்ல வேண்டும் என்று அம்மா கூறினார், அதற்கு மாமா “நெருங்கிய சொந்தமாக இருந்தாலும் நாம் விலகி இருந்து விட்டோம்,, அடுத்த தலைமுறையில் ஆவது இவர்கள் ஒன்றாக இருக்க வேண்டும் எனது விருப்பம் அதுவே என்று மாமா கூறினார்”,
அம்மா சரி அண்ணா நேரம் ஆகிறது நாங்களும் அவனுடன் சென்னை செல்கிறோம்,இப்பொழுது கிளம்பினால் தான் சரியாக வரும் , இருந்து சாப்பிட்டு விட்டு செல்லுமாறு மாமா கூறினார் அதற்கு என் அம்மா இல்லை அண்ணா சம்பந்தம் பேச ஆரம்பித்திருக்கிறோம் அதற்கு முன்பாக கை நனைக்க வேண்டாம் என்று நினைக்கிறேன், எல்லாம் நல்லபடியாக
முடிந்தால் விருந்தே சாப்பிடுகிறோம் என்று கூறிவிட்டு,அண்ணன் ,அண்ணி, ரகு அவர்களிடம் விடைபெற்று,என் அம்மா மலரின் ரூமுக்குள் சென்றார்,அங்கே மலரிடம் நல்ல முடிவாக சொல்லுத்தா என்று சொல்லிவிட்டு கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு விடை பெற்றார், இந்த கார் யாருடையது என்று மாமா கேட்க இது என்னுடைய பிரண்ட் டாக்டர் கார் நான் எவ்வளவோ மறுத்தும் அனுப்பி வைத்துவிட்டார், நீங்கள் சொல்லியிருந்தால் நானே நம்முடைய காரை அனுப்பி இருப்பேனே என்று கூறினார் பரவாயில்ல மாமா அதனால் என்ன என்று பதில் சொன்னேன்.
அம்மா, அண்ணனிடம் நல்ல பதிலை எதிர்பார்க்கிறேன் என்று கூறி காரில் ஏறி அமர்ந்தவுடன் அவர்களிடம் விடைபெற்று கார் கிளம்பியது, கார் டிரைவரிடம் விமான நிலையத்தில் இறக்கி விடுமாறு கூறினேன், சரி என்று கூறியவர் விமான நிலையத்தில் எங்களை இறக்கிவிட்டார்,நாங்கள் விமான நிலையத்திற்கு உள்ளே வந்தோம் ஒன்பது மணிக்கு விமானம் இருந்து கிளம்பி சென்னை வந்து சேர்ந்தோம் ஏர்போர்ட்டின் வெளியே நிறுத்தப்பட்டுள்ள எனது காரை எடுத்துக்கொண்டு நான் அம்மா அப்பா எல்லோரும் எனது வீட்டிற்கு வந்தோம், எனது மனம்அவளை விட்டு வர மறுத்தது என் நினைவுகள் அவளை சுற்றி வந்தது இது எனக்கு புதுமையாகப்பட்டது,நீண்ட நாள் பழகியவர்கள் பிரிந்தது போல் மனநிலை எனக்கு தோன்றியது

Scroll to Top