உறவுகள் தொடர்கதை… உணர்வுகள் சிறுகதை!
சொட்டு சொட்டாய் விழ ஆரம்பித்த மழைத்துளிகள், சில நொடிகளிலேயே ‘சட சட சடவென’ பெருமழையாய் மாறின. வானத்தை யாரோ வாளால் கிழித்துவிட்ட மாதிரி, நீரை அள்ளித் தெளித்தது. நான் பைக்கை வீட்டுக்குள் செலுத்தி, போர்டிகோவிற்குள் நிறுத்துவதற்கு முன்பே, தெப்பலாய் நனைந்திருந்தேன். பைக்குக்கு ஸ்டேன்ட் போட்டுவிட்டு, வீட்டுக்கு பக்கவாட்டில் இருந்த படிக்கட்டில் ஏறி, என்னுடைய மாடி போர்ஷனுக்கு ஓடினேன். வாசலுக்கு வெளியில் இருந்த பூந்தொட்டியை தூக்கி, வீட்டு சாவியை தேடினேன். ஏமாந்தேன். சாவியை காணவில்லை. குழப்பமாக இருந்தது. திரும்பி … Read more