என்னடா, கற்போட இருக்கியா?
“கொடுத்து வைச்சவண்டா!” தனராஜ் மகனைப் பார்த்துக் கண்சிமிட்டினார். “மூணு நாள் ஹோட்டல்லே சாப்பிடப்போறே! தண்ணியடிக்கப்போறே! ஜாலியா இருக்கப்போறே! என் தலையெழுத்தைப் பாரேன்! உங்கம்மாவோட தூரத்துச் சொந்தக்காரங்க ஊருக்குப் போயி துக்கம் விசாரிச்சிட்டிருக்கப்போறேன்.” ”நல்லாச் சொல்லிக் கொடுங்க புள்ளைக்கு!” கணவரைக் கடிந்து கொண்டாள் வனஜா. “இத பார்றா ராஜேஷ், தப்பித்தவறி தண்ணி கிண்ணியடிச்சேன்னு தெரிஞ்சுது, உன்கூட பேசக்கூட மாட்டேன்.” ராஜேஷ் சலிப்புடன் கூறினான். “அய்யோ அம்மா! நீ திரும்பி வர்ற வரைக்கும் நான் கற்போட இருப்பேன் போதுமா? பதினெட்டு … Read more