ராட்சசி – பகுதி 1

Posted on

tamilsexstories “உ..உங்க பேரே மறந்து போச்சு..!!” பிரமிட் நடராஜன் சாயலில் இருந்த பரந்தாமன் நெற்றியை தடவியவாறே சொன்னார்.

“அ..அசோக்..!!” அவருக்கு பதிலளித்த அசோக் அல்லு அர்ஜுன் சாயலில் இருந்தான்.

“ஆங்.. கரெக்ட் கரெக்ட்.. அசோக்..!! இப்போ ஞாபகம் வந்துடுச்சு..!! ஹாஹா.. வயசாயிடுச்சுல..??”

“ம்ம்..!! அதனால என்ன ஸார்..?? பரவால..!!”

“வந்து ரொம்ப நேரம் ஆச்சோ..??”

“இல்ல ஸார்.. ஒரு பத்து நிமிஷம் இருக்கும்.. அவ்வளவுதான்..!!”

“ம்ம்.. காஃபி, டீ ஏதும் சாப்பிடுறீங்களா..??” அவர் சம்பிரதாயமாக கேட்க,

“இ..இல்ல ஸார்.. பரவால..!!” அசோக் புன்னகையுடன் தவிர்த்தான்.

“வெயில்ல அலைஞ்சு வந்திருப்பீங்க போல.. கொஞ்சம் தண்ணியாவது குடிங்க..!!” அவர் கண்ணாடி தம்ளரில் இருந்த தண்ணீரை அசோக்கின் பக்கமாக நகர்த்தினார்.

“பரவால ஸார்.. இருக்கட்டும்..!!” அசோக் அதை தொட்டுக்கூட பார்க்காமல் சொன்னான்.

“ஹ்ம்ம்.. சொல்லுங்க தம்பி.. கிஷோர் தம்பி உங்களை பத்தி ஆஹா ஓஹோன்னு சொன்னாரு.. நானும் ‘சரி அனுப்பி வைங்க.. பேசிப்பாக்குறேன்..’னு சொல்லிருந்தேன்..!!” அவருடைய பேச்சில் ஒரு அலட்சியம் தெரிந்தது. இருந்தாலும்,

“ரொம்ப தேங்க்ஸ் ஸார்.. எனக்காக உங்களோட டைம் ஒதுக்கித் தந்ததுக்கு..!!” அசோக் நிஜமான நன்றியுணர்வுடன் சொன்னான்.

“பரவால தம்பி..!! மொதல்ல.. உங்களை பத்தி கொஞ்சம் சொல்லுங்க..!!”

அவர் கேட்க, அசோக் இப்போது தனது கையிலிருந்த ஃபைலை டேபிள் மீது வைத்தான். சர்ர்ர்ரென ஜிப்பை இழுத்து ஃபைலை திறந்தான். உள்ளே இருந்த அந்த டிவிடி கேஸை வெளியே எடுத்தான். எதிரே இருந்தவரின் முன்பாக வைத்து, அதை அவர் பக்கமாய் நகர்த்தினான். பரந்தாமன் இப்போது சற்றே குழம்பிப்போனவராய், அந்த டிவிடி கேஸ் மீதிருந்து பார்வையை விலக்காமலே கேட்டார்.

“என்ன தம்பி இது..??”

“என் ரெஸ்யூமே ஸார்..!! நான் எடுத்த ஆட் ஃபில்ம்ஸ்.. ஷார்ட் ஃபில்ம்ஸ்.. டாகுமன்ட்ரிஸ்.. எல்லாம் இதுல காப்பி பண்ணிருக்கேன்..!! இதை பாத்தீங்கன்னா என்னைப் பத்தி உங்களுக்கு ஒரு ஐடியா கெடைக்கும்..!!”

“ஹாஹா.. எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி.. நீங்களே கொஞ்சம் உங்களை பத்தி சொல்லிடுங்க..!! என்ன பண்ணுனீங்க.. என்ன பண்ணிட்டு இருக்குறீங்க.. எப்படி போயிட்டு இருக்கு..??”

பரந்தாமன் அப்படி கேட்பார் என்று அசோக் எதிர்பார்க்கவில்லை. சற்றே தடுமாறினான். அவருக்கு பக்கவாட்டில் இருந்த கம்ப்யூட்டரை அமைதியாக ஒருமுறை பார்த்தான். ‘நேரம் இல்லையா..?? அப்புறம் எதற்கு இதெல்லாம் இங்கு இருக்கிறது..??’ என்பது போல இருந்தது அவனது பார்வை. பரந்தாமன் ஒரு கையை, அமர்ந்திருந்த சேரின் கைப்பிடியில் ஊன்றி இருந்தார். புறங்கையை இன்னொரு கையால் தடவிக்கொண்டே, ஒருபக்கமாய் தலையை சாய்த்து வைத்துக்கொண்டு, திறந்த வாயும் இடைவெளி விழுந்த பற்களுமாய் இவனையே பார்த்துக் கொண்டிருந்தார். அசோக் இப்போது மெல்ல ஆரம்பித்தான். தன்னைப் பற்றி கூறினான்.

“எ..என்னை பத்தி சொல்றதுக்கு பெருசா எதுவும் இல்ல ஸார்..!! பொறந்தது வளந்தது படிச்சதுலாம் சென்னைதான்..!! லயலால விஷுவல் கம்யூனிகேஷன் முடிச்சேன்.. காலேஜ்ல படிக்கிறப்போவே ஆட் ஃபில்ம் இண்டஸ்ட்ரி மேல ரொம்ப இன்ட்ரஸ்ட்..!! டிக்ரீ முடிச்சதும்.. சென்னை ஃபில்ம் ஸ்கூல்ல, சிக்ஸ் மன்த்ஸ் கோர்ஸ் அண்ட் ட்ரெயினிங் எடுத்துக்கிட்டேன்.. ஆட் ஃபில்ம் மேகிங் பத்தி..!! அப்புறம்.. நானும், என் கூட படிச்ச பிரண்ட்ஸ் கொஞ்ச பேரும் சேர்ந்து ஒரு அட்வர்டைசிங் கம்பனி ஆரம்பிச்சு, இப்போ நடத்திட்டு இருக்குறோம்.. கிஷோர் கூட அதுல ஒன் ஆஃப் தி பார்ட்னர்ஸ்..!!”

“ம்ம்ம்.. சொன்னாரு சொன்னாரு..!! உங்க ஆபீஸ் எங்க இருக்கு..??”

“வடபழனிதான் ஸார்.. ஆர்காட் டெரஸ்க்கு ஆப்போசிட்..!!”

“ஒ.. அப்போ ரொம்ப பக்கத்துலதான் இல்லையா..??”

” ஆமாம் ஸார்..!!”

“ம்ம்.. எந்த மாதிரி அட்வர்டைஸ்மண்ட்ஸ்லாம் பண்றீங்க..??”

“மெயினா ஆட் ஃபில்ம்ஸ்தான் ஸார்.. மோஸ்ட்லி டிவி கமர்ஷியல்ஸ்..!! இப்போ கொஞ்ச நாளா இன்டர்நெட் அட்வர்டைசிங்லயும் கான்சன்ட்ரெட் பண்ண ஆரம்பிச்சிருக்கோம்..!!”

“எப்படி.. எல்லாம் டைரெக்ட் டீலிங்தானா..??” அவர் கேட்டுவிட்டு அசோக்கையே கூர்மையாக பார்க்க, இப்போது அசோக் சற்றே தடுமாற்றமாய் நெளிந்தான்.

“இ..இல்ல ஸார்.. பாலாஜி அட்வர்டைசிங்கோட டை-அப் வச்சிருக்கோம்.. அவங்கட்ட இருந்து ப்ராஜக்ட் எடுத்து பண்றோம்.. அவங்க ப்ரொடக்ஷனுக்கு அப்பப்போ எங்க டீமை யூஸ் பண்ணிப்பாங்க..!!”

“ஆங்.. அப்படி சொல்லுங்க..!! ம்ம்ம்.. பரவால.. நல்லா புளியங்கொம்பாதான் புடிச்சிருக்கீங்க..!! பிஸினஸ் ஸ்டார்ட் பண்ணி எவ்வளவு நாளாச்சு..??”

“நாலு வருஷம் ஆச்சு ஸார்..!!”

“இப்போ என்ன திடீர்னு பிரச்சனை..??”

“எ..என்ன பிரச்சனைனா..?? பு..புரியல ஸார் ..!!”

“இல்ல.. பிசினஸ்ல ஏதும் ப்ராப்ளமான்னு கேட்டேன்..??”

“ஐயோ.. அதுலாம் ஒன்னும் இல்ல ஸார்..!! பிசினஸ்லாம் நல்லாத்தான் போயிட்டு இருக்கு.. ரொம்ப ஃபாஸ்ட் க்ரோத்னு சொல்ல முடியாட்டாலும்.. ஸ்டெடியா முன்னேறிட்டு இருக்கோம்..!!”

“அப்புறம் ஏன் சினி இண்டஸ்ட்ரிகுள்ள வர ஆசைப்படுறீங்க..??”

“அ..அது.. அது..”

“ம்ம்.. சொல்லுங்க தம்பி..!!”

“இ..இது.. இது எனக்கு ஒரு பேஷன் மாதிரி ஸார்.. இப்போ கொஞ்ச நாளாத்தான்.. ஒரு ஒன் இயராத்தான் இந்தமாதிரி பெரிய ஸ்க்ரீன் மேல எனக்கு ஆசை..!! மூவீஸ் டைரெக்ட் பண்ணனும்னு எனக்குள்ள ஒரு கனவு..!!”

“ஹாஹா.. கனவுதான..?? காண வேண்டியதுதான்..!! இப்போத்தான் ஆளாளுக்கு டைரெக்டர் ஆகணும்னு கனவு வந்துடுதே.. உங்களுக்கும் வந்ததுல ஒன்னும் தப்பு இல்ல.. ஹாஹா..!!”

சொல்லிவிட்டு அவர் சிரித்தார். அவர் சிரிப்பில் இருந்த கிண்டல் அசோக்கை சற்றே எரிச்சலுற செய்தது. ஆனாலும், அவர் புதுமுக இயக்குனர்களை வைத்து இரண்டு ஹிட் படங்கள் கொடுத்திருக்கிற தயாரிப்பாளர் என்ற நினைவு அசோக்கின் மனதை குறுக்கிட, எழுந்த எரிச்சலை மறைத்துக் கொண்டான்.

“தம்பி தப்பா எடுத்துக்க கூடாது.. நான் ஏன் சொல்றேன்னா.. எப்போவுமே இருக்குறதை விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட கூடாது..!!” சொல்லிவிட்டு அவர் பல்லிளித்தார்.

“இல்ல ஸார்.. இதை அப்படி சொல்ல முடியாது.. நான் ஒன்னும் தகுதி இல்லாம ஆசைப்படல.. பெரிய ஸ்க்ரீன்ல கண்டிப்பா ஜெயிக்கமுடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு..!! உண்மையை சொல்லப்போனா.. ஒன் இயர் முன்னாடி வரை எனக்கு சினி இண்டஸ்ட்ரி மேல எந்த ஈடுபாடும் இல்லாமத்தான் இருந்தது..!!”

“ஓ.. அப்புறம் எப்படி திடீர்னு..??”

“ஆக்சுவலா.. ஒன் இயர் முன்னாடி.. எங்க க்ளையன்ட் ஒருத்தருக்காக நான் ஒரு கான்சப்ட் சொன்னேன்.. அதை அவங்க ரிஜக்ட் பண்ணிட்டாங்க.. இருந்தாலும் எனக்கு அந்த கான்சப்ட் பிடிச்சிருந்ததால.. ஒரு செல்ஃப் இன்ட்ரஸ்ட்ல, அந்த கான்சப்டை ஷார்ட் ஃபில்மா ஷூட் பண்ணிணேன்.. யூட்யூப்ல அப்லோட் பண்ணினேன்.. நெறைய பேர் நல்லாருக்குன்னு சொன்னாங்க.. அதுல இருந்துதான் எனக்கு மூவிஸ் மேல இன்ட்ரஸ்ட் வர ஆரம்பிச்சது..!! அதுக்கப்புறம் நானே நெறைய கான்சப்ட்ஸ் யோசிக்க ஆரம்பிச்சேன்.. அப்பப்போ அதை ஷார்ட் ஃபில்ம்ஸா எடுத்து யூட்யூப்ல அப்லோட் பண்ணுவேன்.. எல்லாத்துக்குமே செம ரெஸ்பான்ஸ்..!! இதுவரை அஞ்சு ஷார்ட் ஃபில்ம்ஸ் எடுத்திருக்குறேன்.. அந்த ஷார்ட் ஃபில்ம்ஸ்லாம் பாத்தீங்கன்னா, என்னோட கனவுல ஒரு நியாயம் இருக்குன்னு உங்களுக்கே புரியும்..!! ப்ளீஸ் ஸார்.. ஒரு அஞ்சு நிமிஷம்.. அந்த டிவிடி கொஞ்சம் பாருங்களேன்..!!” அசோக்கின் குரலில் மெலிதான கெஞ்சல் ஒளிந்திருந்தது.

“ஹாஹா.. இதைப்பாத்து நான் என்ன தம்பி பண்ணப் போறேன்..?? என்னை பொறுத்தவரை ஷார்ட் ஃபில்ம்ஸ் வேற.. சினிமா வேற..!! எனக்கு இந்த பாஸ்ட் எக்ஸ்பீரியன்ஸ், ராசியான ஆர்டிஸ்ட், இமேஜ், பொடலங்கா, கத்தரிக்கா.. இதுலலாம் நம்பிக்கை இல்ல தம்பி..!! நான் அறிமுகப்படுத்தின ரெண்டு டைரக்டரும் புதுப்பசங்கதான்.. உங்கள மாதிரி சினிமால எந்த அனுபவும் இல்லாதவங்கதான்..!!”

“ம்ம்.. தெரியும் ஸார்.. அதான் நானும் ஒரு நம்பிக்கையோட வந்திருக்கேன்..!!”

“எனக்கு சப்ஜக்ட்தான் தம்பி முக்கியம்.. எந்த மாதிரி ஸ்டோரி வச்சிருக்கீங்க, எந்த மாதிரி புதுபுது ஐடியாஸ் வச்சிருக்கீங்க.. அதுதான் எனக்கு முக்கியம்..!! டெக்னாலாஜி பத்தி நீங்க ஒன்னும் வொர்ரி பண்ணிக்க தேவை இல்ல.. அதுக்கெல்லாம் ஆள் வச்சுக்கலாம்..!! சப்ஜக்ட் பத்தி சொல்லுங்க தம்பி.. நீங்க சொல்ற ஸ்டோரி எனக்கு பிடிச்சிருந்தா.. கண்டிப்பா உங்களை வச்சு படம் எடுக்குறேன்..!!”

பரந்தாமன் அப்படி சொன்னதும், கொஞ்ச நேரமாக தளர்ந்து போயிருந்த அசோக் இப்போது மீண்டும் உற்சாகமானான். முதுகில் யாரோ குத்தியது மாதிரி நிமிர்ந்து அமர்ந்தான். லேசாக தொண்டையை செருமிக்கொண்டு, கொஞ்சமாய் எச்சில் கூட்டி விழுங்கிக்கொண்டு, மெல்ல ஆரம்பித்தான்.

“இ..இது.. இது ஒரு ஹாரர் த்ரில்லர் சப்ஜக்ட் ஸார்..!! ஒரு மலையடிவாரத்துல இருக்குற கிராமத்துல நடக்குற மாதிரிதான் இந்தக்கதையை நான் யோசிச்சு வச்சிருக்கேன்..!! ஒரு ரெய்னி ஸீசன்ல.. சுத்தி பச்சை பசேல்னு மரமும், செடியுமா.. எந்த நேரமும் மழையும், இடியுமா.. ஒரு அழகான, அமானுஷ்யமான பேக்ட்ராப்ல.. அடுத்தடுத்து சில கோரமான சாவுகள் நடக்குது.. அந்த சாவுகளுக்கு பின்னாடி இருக்குற ஷாக்கிங் மிஸ்ட்ரியை சொல்றதுதான் இந்தக்கதை..!! தங்களோட பூர்வீக பங்களாவை விக்கிறதுக்காக, அந்த கிராமத்துக்கு வர்ற ஹீரோ அண்ட் ஹீரோயினோட வியூலதான் மொத்த கதையும் நகருது.. ஒரு ஸ்டேஜ்ல, அங்க நடக்குற மர்மமான சம்பவங்களுக்கும் தங்களுக்கும் ஒரு லிங்க் இருக்குன்னு.. அவங்களுக்கு தெரியவருது.. உண்மை என்னன்னு கண்டுபிடிக்க ரெண்டு பேரும் ட்ரை பண்றாங்க..!! அந்த உண்மை என்ன.. அதை எப்படி கண்டுபிடிச்சாங்க.. அதுக்கப்புறம் அவங்களுக்கு என்ன ஆச்சுன்னு சொல்றதுதான் மீதி கதை..!!”

கதைச்சுருக்கத்தை முதலில் சொல்லி அவரை தயார் படுத்தி விட்டதாக எண்ணிய அசோக், அடுத்து ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு காட்சியாக அவருக்கு நெரேட் செய்ய நினைத்தான். முதல் காட்சியை அவனுடைய மனக்கண்ணில் நிறுத்தி, அதை அவருக்கு உரைக்க முற்பட்டான்.

“படம் ஆரம்பிக்கிறப்போவே ரொம்ப த்ரில்லிங்கா ஷாக்கிங்கா ஆரம்பிக்கிறோம் ஸார்.. ஃபர்ஸ்ட் ஸீன்லயே..” அசோக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அவனை இடைமறித்து,

“அந்த கொலைலாம் பண்றது யார் தம்பி..??” என்று பரந்தாமன் அசால்டாக கேட்டார். அவர் அப்படி கேட்டதும் ஓரிரு வினாடிகள் அவரையே திகைப்பாக பார்த்த அசோக், அப்புறம்

“இ..இருங்க ஸார்.. நான் ஒவ்வொரு ஸீனா சொல்றேன்.. அப்போத்தான் நல்லாருக்கும்.. இப்போவே க்ளைமாக்ஸை சொல்லிட்டா உங்களுக்கு சுவாரசியம் போய்டும்..!!” என்று பரிதாபமாக சொன்னான்.

“ஹாரர்னா..?? எந்த மாதிரி ஹாரர் தம்பி..??” அவர் கேள்வியை மாற்றினார்.

“சூப்பர் நேச்சுரல் ஹாரர்..!!” அசோக் கெத்தாக சொல்ல,

“ஹ்ஹ.. பேய்ப்படமா..??” அவர் கேலியாக கேட்டார்.

“ஆமாம் ஸார்..!!”

“அப்போ.. பேய்தான் இந்தக்கொலைலாம் பண்ணுதா..??”

“ஆ..ஆமாம் ஸார்..!!”

‘கதை சொல்கிற சுவாரசியத்தையே இந்த ஆள் காலி செய்துவிட்டாரே’ என்று நொந்துபோன குரலில் சொன்னான் அசோக். அவரோ தனது கனத்த சரீரம் குலுங்கும் அளவிற்கு ‘ஹாஹா..’ என்று கனைத்தார். கிண்டல் தொனிக்கும் குரலில் சொன்னார்.

“என்ன தம்பி நீங்க.. நான் உங்ககிட்ட இருந்து என்னன்னவோ எதிர்பார்த்தேன்.. நீங்க என்னடான்னா.. பேய், பூதம், ரத்தக்காட்டேரின்னு சப்புன்னு முடிச்சுட்டீங்க..??” அவர் சொன்னதைக்கேட்டு சற்றே அதிர்ந்த அசோக்,

“ஸார்.. நீங்க ஒரு தடவை கதையை முழுசா கேளுங்க ஸார்.. அப்புறம் சொல்லுங்க.!!” என்று அவசரமாக சொன்னான்.

“அவுட்லைனே புடிக்கலன்றேன்.. அப்புறம் கதையை கேட்டு என்ன ஆகப்போகுது தம்பி..?? வேற ஏதாவது ஸ்டோரி இருந்தா சொல்லுங்க..!!”

“வே..வேறன்னா..”

“வேறன்னா வேறதான்..!! வேற ஏதும் ஸ்டோரி உங்கட்ட இல்லையா..??”

“இ..இருக்கு.. ஆனா..” அசோக் இழுக்க,

“அதுவும் பேய் ஸ்டோரியா..??”

“ஆ..ஆமாம்..!!”

“ஹ்ம்ம்… இன்னொரு பேய்.. இன்னொரு பத்து பதினஞ்சு பேரை கொல்லுதா..??”

“ம்ம்..!!”

“இது எந்த பேக்ட்ராப்ல..?? நல்லா பளீர்னு வெயில் கொளுத்துற பாலைவனத்துலையா..??” இப்போது அவரது குரலில் நக்கல் மிதமிஞ்சி போயிருந்தது.

“இ..இல்ல ஸார்.. அது வேற மாதிரி தீம்..!!”

“அட போங்க தம்பி..!!” அவர் சலித்துக்கொண்டார்.

“ஸார்.. எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க.. நான் ஸ்டோரியை முழுசா சொல்றேன்.. இந்த ஸ்டோரி கண்டிப்பா வொர்க்கவுட் ஆகும் ஸார்.. படம் பாக்க வர்றவங்கள எப்படிலாம் பயமுறுத்தலாம்னு.. நான் புது புது ஐடியாஸ் வச்சிருக்கேன் ஸார்.. மக்கள் அதெல்லாம் கண்டிப்பா ரசிப்பாங்க..!!”

“ஹாஹா.. மக்கள் இந்த மாதிரி கதைலாம் ரசிக்க மாட்டாங்க தம்பி.. நான் இருபத்திரண்டு வருஷமா இந்த ஃபீல்ட்ல இருக்கேன்.. மக்களோட ரசனையை பத்தி எனக்கு நல்லா தெரியும்..!! வேற ஏதாவது நல்ல ஸ்டோரி இருந்தா சொல்லுங்க..!!” அவர் பேசிய விதத்தில் அசோக் மிகவும் சோர்ந்து போனான்.

“ஓ..!! நல்ல ஸ்டோரினா.. எப்படி..??” என்று சுரத்தில்லாமல் கேட்டான்.

“ஏதாவது லவ் ஸ்டோரி தம்பி..!!”

அவ்வளவுதான்..!! அந்த ‘லவ்’ என்ற வார்த்தையை கேட்டதுமே அசோக்குக்கு ரத்த அழுத்தம் குபுக்கென எகிற ஆரம்பித்தது. அவன் முகத்தில் தெரிந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் இப்போது சட்டென வடிந்து போனது. ஒற்றை விரலால் நெற்றியை தேய்த்தவாறே, எதிரே இருந்தவரை எரிச்சலாக பார்த்தான். அவ்வளவு நேரம் பரந்தாமனிடம் இருந்த ஒரு அலட்சிய மனோபாவம், இப்போது அசோக்கையும் தொற்றிக் கொண்டது. இப்போது சற்றே கிண்டலான குரலில் கேட்டான்.

“ஓ.. லவ் ஸ்டோரிதான், உங்க பாஷைல நல்ல ஸ்டோரியா..??”

“என்ன தம்பி தெரியாத மாதிரி கேக்குறீங்க.. தியாகராஜ பாகவதர் காலத்துல இருந்தே.. அதுதான எவர்க்ரீன் ஹிட் ஃபார்முலா.. அதைத்தான மக்கள் ரசிக்கிறாங்க..??”

“அப்படிலாம் ஒன்னும் இல்ல ஸார்.. ஸ்டோரியும், சொல்ற விதமும் நல்லா இருந்தா போதும்.. எந்த மாதிரி ஸ்டோரியா இருந்தாலும் மக்கள் ரசிப்பாங்க..!! இப்போ பிஸ்ஸானு ஒரு படம் வந்து பிச்சுக்கிட்டு ஓடுது.. பாத்திங்கல்ல..??”

“ஹாஹா.. நான் அப்படிலாம் புதுமுயற்சி பண்ணி ரிஸ்க் எடுக்க ரெடியா இல்ல தம்பி..!! என்னோட படங்கள் எப்போதும் மெல்லிய காதல் உணர்வுகளை சொல்ற படமாத்தான் இருக்கும்.. நான் ஏற்கனவே எடுத்தது ரெண்டும் லவ் ஸ்டோரிதான்.. இனிமே எடுக்க போறதும் லவ் ஸ்டோரிதான்..!! அலைபாயுதே, துள்ளுவதோ இளமை மாதிரி.. ஃப்ரெஷா, யூத்ஃபுல்லா ஒரு ஸ்டோரி இருந்தா சொல்லுங்க.. இப்போவே அக்ரீமன்ட் போட்டுக்கலாம்..!!”

“ஓ..!! பெத்தவங்களையும், டீச்சர்சையும் எப்படிலாம் ஏமாத்தலாம்னு கத்துக்குடுக்குற மாதிரி படம் எடுக்க சொல்றீங்க..?? அப்படியா..??”

“ஹாஹா.. என்ன தம்பி நீங்க.. அதெல்லாம் பாத்தா சினிமாவே எடுக்க முடியாது.. அப்படிப்பாத்தா.. நீங்க சொன்ன பேய்க்கதை மட்டும் என்ன ஒழுங்கா..?? பேயை நேர்ல பாத்திருக்கீங்களா நீங்க..??”

“இல்ல..!!”

“அப்புறம்.. அது மக்களுக்கு மூட நம்பிக்கையை வளக்குற மாதிரிதான..??”

“காதல்ன்ற பேர்ல ஆடியன்ஸ் அறியாமலே அவங்க மனசுல விஷத்தை கலக்குறதுக்கு.. கற்பனைன்ற பேர்ல நேர்மையா அவங்களை கொஞ்ச நேரம் பயமுறுத்துறது ஒன்னும் தப்பு இல்ல ஸார்..!!”

“அட.. காதல்னு அழகான ஒரு விஷயம் இருக்குறப்போ.. பேய் பூதம்னு எதுக்கு தம்பி படம் பாக்க வர்றவங்கள பயமுறுத்தனும்..?? நீங்க ஒன்னு பண்ணுங்க..”

“என்ன..??”

“கொஞ்ச நாள் டைம் எடுத்துக்கங்க.. ஒரு நல்ல லவ் ஸ்டோரி ரெடி பண்ணிட்டு வந்து என்னை பாருங்க.. சரியா.??”

“இல்ல ஸார்.. எனக்கு லவ் ஸ்டோரிஸ்ல இன்ட்ரஸ்ட் இல்ல.. கண்டிப்பா நான் லவ் ஸ்டோரிலாம் எழுத மாட்டேன்..!!”

“ஹாஹா.. உங்களை மாதிரி ஒரு யங்க்ஸ்டர்.. காதல் பிடிக்காதுன்னு சொல்றது ஆச்சரியமா இருக்கு தம்பி..!!”

“காதல் பிடிக்காதுன்னு சொல்லல ஸார்.. காதல் கதைகள்தான் பிடிக்காதுன்னு சொன்னேன்..!!”

“ரெண்டும் ஒண்ணுதான் தம்பி..!! நீங்க யாரையாவது காதலிச்சிருந்தா.. காதல்க்கதைகள் மேலயும் உங்களுக்கு ஆர்வம் வந்திருக்கும்.. நீங்க பேசுறதை வச்சே எனக்கு புரிஞ்சு போச்சு.. உங்களுக்கு எதுவும் மாட்டலைன்னு..!! நான் நெனைச்சது சரியா..??”

நக்கலாக சொன்ன பரந்தாமன் தனது தலையை சற்றே தாழ்த்தி அசோக்கை கூர்மையாக பார்த்தார். அசோக்கிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போக, அவரே வெற்றிக்கனைப்புடன் தொடர்ந்தார்.

“ஹாஹஹா..!! போங்க தம்பி.. பேய், பிசாசுன்னு ஏதாவது கதை எழுதுறதை விட்டுட்டு.. போய் யாரையாவது லவ் பண்ணுங்க.. போங்க..!!”

பரந்தாமன் சொல்லிவிட்டு சிரிக்க, அசோக் அவரையே சில வினாடிகள் முறைப்பாக பார்த்தான். அவர் பேச்சில் இருந்த கிண்டல் அவனுக்கு எக்கச்சக்கமாய் எரிச்சலை உண்டுபண்ணியிருந்தது. அவருடன் அதற்கு மேலும் விவாதம் செய்ய விரும்பாதவனாய் கேட்டான்.

“அப்போ.. ஃபைனலா என்னதான் ஸார் சொல்றீங்க ..??”

“இன்னுமா உங்களுக்கு புரியல..?? சரி.. தெளிவாவே சொல்லிர்றேன்.. நான் உங்களை மாதிரி இல்ல தம்பி.. எனக்கு காதல் பிடிக்கும்.. காதல்கதைகளையும் பிடிக்கும்.. காதலை மையமா வச்சு உருவாக்குற கதைகளைத்தான் நான் ப்ரொட்யூஸ் பண்ணுவேன்.. என்னோட கொள்கைல இருந்து நான் எப்போதும் மாறுறதா இல்ல..!! நல்ல காதல்க்கதை இருந்தா மறுபடி என்னை வந்து பாருங்க.. இல்லனா வராதீங்க.. இப்போ இடத்தை காலி பண்ணுங்க…!!”

சொல்லி முடித்து அமைதியான பரந்தாமன், அசோக்கின் முகத்தையே குறுகுறுவென பார்த்தார். அவருடைய உதட்டில் ஒருவித விஷமப் புன்னகை வழிந்தது. அசோக் என்ன செய்வது என்று அறியாதவனாய், ஏமாற்றமும் எரிச்சலும் மிகுந்த மனதுடன், அசையாமல் அமர்ந்திருந்தான். அப்போதுதான் அவன் பார்வை, எதிரே இருந்தவரின் முதுகுக்கு பின்னால் இருந்த அந்த ஷோ கேஸில் எதேச்சையாக விழுந்தது. அதன் மேல் வைக்கப்பட்டிருந்த அந்த பெரிய சைஸ் புகைப்படத்தின் மீதும்..!! உடனே அவனுடைய எரிச்சலடைந்திருந்த மூளை சுறுசுறுப்பாய் எதையோ யோசிக்க ஆரம்பித்தது..!! ஒரு சில வினாடிகளிலேயே ஒரு முடிவுக்கு வந்தான். உதட்டுக்கு அவசரமாய் ஒரு புன்னகையை கொடுத்தவாறே அவரை ஏறிட்டான். குரலில் ஒருவித குறுகுறுப்புடன் கேட்டான்.

“அப்போ.. உங்களுக்கு காதல்க்கதைகளையும் பிடிக்கும், காதலையும் பிடிக்கும்.. அப்படித்தான ஸார்..??”

“ஆமாம்.. இவ்ளோ நேரம் அதைத்தான சொல்லிட்டு இருந்தேன்..??”

“பேச்சு மாற மாட்டீங்களே..??” அசோக் அவ்வாறு குதர்க்கமாய் கேட்கவும்,

“இ..இதுல பேச்சு மாற என்ன இருக்கு..??” அவர் இப்போது குழப்பமாய் இவனை பார்த்தார்.

“ஸாரி ஸார்.. என்னை மன்னிச்சுடுங்க..!!”

“மன்னிக்கனுமா.?? எதுக்கு..??”

“இவ்வளவு நேரம் உங்ககிட்ட டைரக்டர் சான்ஸ் கேட்டு வந்தவன் மாதிரி நடிச்சதுக்கு..!!”

“ந..நடிச்சியா..?? எ..என்ன சொல்ற நீ..??” அவர் பதட்டத்தில் பட்டென ஒருமைக்கு தாவினார்.

“ஆமாம் ஸார்.. உங்களோட மனநிலைமையை பத்தி தெரிஞ்சுக்கத்தான் இவ்ளோ நேரம் நடிச்சுட்டு இருந்தேன்.. ஆக்சுவலா கிஷோர்ட்ட சொல்லி உங்க அப்பாயின்ட்மன்ட் வாங்கினது.. உங்ககிட்ட கதை சொல்றதுக்காக இல்ல..!!”

“அ..அப்புறம்..??” அவர் இப்போது குழப்பத்தின் உச்சிக்கே சென்றிருந்தார்.

“நா..நானும்..”

“நீயும்..??”

“உ..உங்க மகளும்..”

“என் மகளும்..????” பரந்தாமனின் முகம் பதட்டத்தில் துடித்தது.

“நானும் உங்க மகளும் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்றோம் ஸார்.. ரெண்டு பேரும், ரெண்டு வருஷமா உயிருக்கு உயிரா காதலிக்கிறோம்..!! நீங்கதான்.. ஸ்டேட்டஸ்லாம் பாக்காம.. எங்களுக்கு கல்யாணம் செஞ்சு வச்சு.. எங்க காதலை..”

அசோக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, பரந்தாமன் உச்சபட்ச டென்ஷனை அடைந்திருந்தார். அமர்ந்திருந்த சேரில் இருந்து விருட்டென எழுந்தார். ‘டேய்ய்ய்..!!!’ என்று கத்தியவாறு, அசோக்கின் சட்டையை எட்டி கொத்தாக பிடித்து இழுத்தார். அவருடைய முகம் இப்போது திடீர் ஆத்திரத்தை பூசிக்கொண்டு கோரமாக மாறியிருந்தது. காண சகிக்கவில்லை..!! ‘பேயை நேர்ல பாத்திருக்கீங்களா நீங்க..??’ என்று சற்றுமுன் அவர் கேட்ட கேள்விக்கு, இப்போது பதில் சொல்ல வேண்டும் போலிருந்தது அசோக்கிற்கு..!! அவன் சொல்வதற்கு முன்பாகவே, பரந்தாமன் ஆத்திரத்தில் படபடவென பொரிந்தார்.

“ஏண்டா… எ..என்ன நெஞ்சழுத்தம் உனக்கு.. எவ்வளவு தைரியம் இருந்தா.. என் ஆபீசுக்கே வந்து.. என்கிட்டயே.. என் பொண்ணை லவ் பண்றேன்னு சொல்லுவ..?? உ..உன்னை என்ன பண்றேன் பாரு.. என்ன பண்றேன் பாரு இப்போ..!!” என்று கறுவியவர், அசோக்கின் சட்டையை பிடித்த பிடியை விடாமல், இன்னொரு கையால் டேபிள் ஓரத்தில் இருந்த தனது செல்போனை எட்டி எடுத்தார்.

“ஸார்.. நீங்கதான ஸார் காதல் ஒரு அழகான விஷயம்னு சொன்னீங்க..?? இப்போ திடீர்னு டென்ஷன் ஆகுறீங்க..?? ப்ளீஸ் ஸார்.. எங்க காதலை பிரிச்சிடாதீங்க..!!”

அசோக் கிண்டலாக சொன்னதை கண்டுகொள்ளாத பரந்தாமன், கையிலெடுத்த செல்போனின் பட்டன்களை, பதற்றத்தில் நடுங்கிய விரல்களால் படபடவீன அழுத்தினார். கோபத்தில் வெடவெடத்த உதடுகளுடன் முணுமுணுத்தார்.

“எனக்கு தெரியும்.. எனக்கு முன்னாடியே தெரியும்.. அந்த திருட்டு சிறுக்கி என்னைக்காவது ஒருநாளு.. இந்த மாதிரி எவனையாவது இழுத்துட்டு வருவான்னு.. அவளை..”

அவர் அந்த மாதிரி முணுமுணுத்ததுந்தான் அவர் தன் மகளுக்கு கால் செய்கிறார் என்று அசோக் புரிந்து கொண்டான். உடனே அவர் கையிலிருந்த செல்போனை பிடுங்கி அவரை தடுத்தான்.

“ஸார் ஸார்.. இருங்க ஸார்.. அவசரப்படாதீங்க.. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க..!!”

“எதைடா பொறுமையா கேக்க சொல்ற.. நீயும் என் பொண்ணும் டாவடிச்ச கதையை.. பொறுமையா உக்காந்து கேட்டுட்டு இருக்க சொல்றியா..??”

“ஹையோ.. நான் சும்மா சொன்னேன் ஸார்.. எங்களுக்குள்ள எந்த லவ்வும் இல்ல.. உங்க பொண்ணை நான் பாத்தது கூட கெடயாது.. அவங்க பேர் கூட எனக்கு தெரியாது..!!”

அசோக் அவ்வாறு சொன்னதும், பரந்தாமன் பட்டென முகம் மாறினார். அவர் முகத்தில் கொப்பளித்த கோபம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து, குழப்பம் நிரம்பியது.

“ஏ..ஏய்.. எதுக்குடா பொய் சொன்ன..??”

“மொதல்ல நீங்க உக்காருங்க ஸார்..!!”

அசோக் அவரை சேரில் அமர வைத்தான். அவருடைய உடல் இன்னும் அதிர்வில் இருந்து மீளாமல் நடுங்கிக் கொண்டிருந்தது. அசோக்கையே எரித்துவிடுவதுபோல் ஆத்திரமாக பார்த்துக் கொண்டிருந்தார்.

“டென்ஷன் ஆகாதீங்க ஸார்.. ரிலாக்ஸ்..!! இந்தாங்க.. இந்த தண்ணியை கொஞ்சம் குடிங்க..!!”

சற்றுன் அவர் தன் பக்கமாக நகர்த்தி வைத்த தண்ணீர் க்ளாஸை, இப்போது அசோக் அவர் பக்கமாக நகர்த்தி வைத்தான். அவரும் அதை எடுத்து மொத்த தண்ணீரையும் கடகடவென தன் தொண்டைக்குள் சரித்துக் கொண்டார். தண்ணீர் குடித்த பின்பும் அவரது கொதிப்பு அடங்கியது மாதிரி தெரியவில்லை. ‘தஸ்.. புஸ்..’ என்று பெரிது பெரிதாக மூச்சு விட்டார். மார்பு சரக் சரக்கென ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. அசோக் அவனது நடிப்பை மேலும் கொஞ்ச நேரம் தொடர்ந்திருந்தால், மாரடைப்பில் போய் சேர்ந்திருப்பார் போல் தெரிந்தது. அந்த மாதிரி திணறல் மூச்சு விட்டுக்கொண்டே அசோக்கைப் பார்த்து கேட்டார்.

“சொ..சொல்லுடா.. ஏன் பொய் சொன்ன..??”

“ஒண்ணுல்ல ஸார்.. சும்மா.. ஒரு உண்மையை கன்ஃபார்ம் பண்ணிக்கலாமேன்னுதான்..!!”

“என்ன உண்மையை..??” அவர் குழப்பமாக கேட்க, இப்போது அசோக் புன்னகையுடன் சொன்னான்.

“உங்களுக்குலாம் கதைலயும், சினிமாலயும்தான் ‘காதல் அழகான விஷயம்’..!! இல்ல..?? அதே உங்க குடும்பத்துல நடந்தா.. அசிங்கம்..!! ஏத்துக்க மாட்டிங்க..!! ஆனா.. எவனோ லவ் பண்ணி, எப்படியோ நாசமா போகட்டும்னு.. படம் மட்டும் வரிசையா எடுத்து ரிலீஸ் பண்ணிடுவீங்க..!! காதலை வச்சு.. நல்லா காசு பாத்து.. அதை மட்டும் பேங்க்ல போட்டு வச்சுப்பிங்க.. ஆனா அந்த காதலை மட்டும் உங்க வீட்டுக்குள்ள விட மாட்டீங்க..!! அப்படித்தான ஸார்..?? சூப்பர் ஸார்.. உங்க கொள்கையை நெனச்சா எனக்கு அப்படியே புல்லரிக்குது..!!”

அசோக் பேசிய பேச்சில் இருந்த உண்மை பரந்தாமனின் முகத்தை அறைய, அவர் பதில் பேச நாவெழாமல் அமைதியாக அமர்ந்திருந்தார். ஏதோ ஜென்ம விரோதியை பார்ப்பதுபோல, அவனையே முறைத்துக் கொண்டிருந்தார். அசோக் உதட்டில் இருந்த புன்னகை மாறாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். பரந்தாமன் அதற்குமேலும் அந்த சூழ்நிலையை விரும்பாதவராய் வெறுப்புடன் சொன்னார். இல்லை.. கத்தினார்..!!

“டேய்.. வெளில போடா..!!”

“போறேன் ஸார்.. இதுக்கப்புறமும் உங்ககிட்ட பேசிட்டு இருக்க எனக்கு என்ன கிறுக்கா புடிச்சிருக்கு..?? வந்ததும் உங்க டைம் எனக்கு செலவு பண்ணினதுக்காக தேங்க்ஸ் சொன்னேன்.. இப்போ.. உங்ககிட்ட பேசி என் டயத்தை வேஸ்ட் பண்ணினதை நெனச்சு.. ரொம்ப ஃபீல் பண்றேன்..!! வர்ட்டா..!!”

ஸ்டைலாக சொன்ன அசோக், அவர் முன்பாக இருந்த டிவிடி கேசை எடுத்துக்கொண்டு, கிளம்பினான். அறையை விட்டு வெளியேறினான். அவன் கண்ணில் இருந்து மறையும் வரை பரந்தாமன் அவனது முதுகையே வெறுப்பாக பார்த்துக் கொண்டிருந்தார்.

அந்த பில்டிங்கை விட்டு வெளியே வந்த அசோக், உடனடியாய் செய்த காரியம்.. தன் செல்போன் எடுத்து கிஷோருக்கு கால் செய்ததுதான்..!! அடுத்த முனையில் கால் பிக்கப் செய்யப்பட்டதுமே, அசோக் அதற்காகத்தான் காத்திருந்தவன் போல, கன்னாபின்னாவென்று திட்ட ஆரம்பித்தான்..!!

“பன்னாடை.. பரதேசி.. தெருப்பொறுக்கி.. பிச்சைக்கார நாயே..!!”

“டேய்.. டேய்.. என்னடா ஆச்சு.. ஏண்டா திட்டுற..??”

“வெண்ணை.. புண்ணாக்கு.. மொள்ளமாரி.. தெள்ளவாரி..!!”

என்னவென்று புரியாமல் அந்தப்பக்கம் கிஷோர் கதறிக் கொண்டிருக்க. அதை பொருட்படுத்தாமல் இந்தப்பக்கம் அசோக், கெட்ட வார்த்தைகளை சரமாரியாக சிதறிக் கொண்டிருந்தான்.

– தொடரும்