ராட்சசி Part 4

அந்த நாளும் அடுத்த நாளும் அசோக்கிற்கு ஒருவித பிரம்மையும் பிரச்னையுமாகவே கழிந்தன..!! ஆசைஆசையாக பேச சென்றவனின் மனதை.. அந்தப் பெண்ணுடைய அனல் கக்கும் பார்வையும்.. அவள் கழற்றி கையிலெடுத்த செருப்பும்.. அந்த செருப்பின் அகலமான அடிப்புறமும்.. அதில் ஓரமாய் ஒட்டியிருந்த பபிள்கமும்.. என எல்லாமும் சேர்ந்து.. ரொம்ப.. ரொம்பவே பாதித்துவிட்டன..!! அந்த பாரதிக்கு.. ‘பார்க்கும் மரங்கள் எல்லாம் பச்சை நிறம்’ தோன்றிய மாதிரி.. இந்த பாரதி மைந்தனுக்கு.. காணும் இடங்கள் எல்லாம் கலர் கலராய் செருப்புகள்தான் தோன்றின..!! … Read more

ராட்சசி Part 3

அடுத்த நாள் காலை அசோக் கண்விழித்தபோது, அவனது தலைக்கடியில் இரண்டும், பக்கவாட்டில் இரண்டுமாய் நான்கு தலையணைகள் வைக்கப்பட்டிருந்தன. இரவு ஒரு மூலையில் கிடந்த அந்த போர்வை, இப்போது அவன் உடலை முழுவதுமாய் போர்த்தி, காலைக்குளிருக்கு இதமாக கதகதப்பை வழங்கிக் கொண்டிருந்தது. இரவில் பளிச்சென்று எரிந்த குழல்விளக்கு இப்போது அணைந்துபோயிருக்க, கண்ணை உறுத்தாத வெளிச்சத்தை வெளியிட்டுக் கொண்டிருந்தது இரவு விளக்கு ஒன்று..!! கண்விழித்ததுமே மனதுக்குள் ஒரு புத்துணர்வும் புதிதாய் விழித்துக் கொண்டதை அசோக்கால் உணர முடிந்தது. தலையை திருப்பி … Read more

ராட்சசி Part 2

வடபழனியில் இருந்து வளசரவாக்கம் வருவதற்குள்ளாகவே அசோக் கண்ணயர்ந்திருந்தான். அவனுடைய தலை கார் சீட்டில் சாய்ந்து அண்ணாந்திருக்க, வாய் ‘ஆ’வென்று பிளந்திருந்தது. ஆல்கஹாலால் குழம்பிப் போயிருந்த அவனது மூளை, அன்று முழுதும் அவனை பாதித்த விஷயங்களை எல்லாம், கடுகளவும் லாஜிக் இல்லாமல் கண்களுக்குள் படமாக ஓட்டிக்கொண்டிருந்தது. கொட்டும் மழையில்.. கோரமான பற்களுடனும்.. கொலைவெறி கொப்பளிக்கும் விழிகளுடனும்.. பரந்தாமன் ஷிவாவையும், ப்ரியாவையும்.. கோடாரியுடன் விரட்டினார்..!! ‘யாரைப்பாத்து ஆண்ட்டின்னு சொன்ன..? யாரைப்பாத்து சொன்ன..? இனிமே சொல்லுவியா..? சொல்லுவியா.. சொல்லுவியா..??’ என்று சாலமனின் … Read more

ராட்சசி Part 1

“உ..உங்க பேரே மறந்து போச்சு..!!” பிரமிட் நடராஜன் சாயலில் இருந்த பரந்தாமன் நெற்றியை தடவியவாறே சொன்னார். “அ..அசோக்..!!” அவருக்கு பதிலளித்த அசோக் அல்லு அர்ஜுன் சாயலில் இருந்தான். “ஆங்.. கரெக்ட் கரெக்ட்.. அசோக்..!! இப்போ ஞாபகம் வந்துடுச்சு..!! ஹாஹா.. வயசாயிடுச்சுல..??” “ம்ம்..!! அதனால என்ன ஸார்..?? பரவால..!!” “வந்து ரொம்ப நேரம் ஆச்சோ..??” “இல்ல ஸார்.. ஒரு பத்து நிமிஷம் இருக்கும்.. அவ்வளவுதான்..!!” “ம்ம்.. காஃபி, டீ ஏதும் சாப்பிடுறீங்களா..??” அவர் சம்பிரதாயமாக கேட்க, “இ..இல்ல ஸார்.. … Read more

கவிதைக்கு பொய் அழகு..!!

கதீட்ரல் ரோட்டில் இருந்து உள்ளே செல்லும் ஒரு குறுகிய சாலையில், எழுபத்தைந்து சதவிகிதம் முடிவடைந்த நிலையில் நின்றிருக்கிறது அந்த கட்டிடம். எட்டு தளங்கள் கொண்ட பிரம்மாண்டமான கட்டிடம். ஏழாயிரம் பேர் வசதியாக அமர்ந்து வேலை பார்க்க கூடிய கொள்ளளவு. பகல், இரவு என முழு வீச்சில் வேலை நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் மூன்று மாதங்களில், ஒரு பெரிய சாப்ட்வேர் கம்பெனியின் ஒரு யூனிட் அங்கு வந்து குடியேற போகிறது. அந்த கட்டிடத்தின் மொட்டை மாடியில், மாலை வெயிலுக்கு … Read more

“மேட்ச் பாய்ன்ட்..!!”

“மேட்ச் பாய்ன்ட்..!!” சொல்லிவிட்டு அம்பயர் என்னைப் பார்த்து மெலிதாக புன்முறுவல் செய்தார். இவ்வளவு நேரம் இல்லாத ஒரு படபடப்பு, இப்போது என் இதயத்தின் ஒவ்வொரு அணுவிலும் படுவேகத்தில் பரவ ஆரம்பித்தது. விரல்கள் லேசாக நடுக்கம் கொள்ள ஆரம்பித்தன. தலைக்குள் யாரோ அமர்ந்து தபேலா வாசிப்பது மாதிரி இருந்தது. நான் கண்களை இறுக்கி மூடிக் கொண்டேன். மூச்சை ஆழமாக உள்ளிழுத்து, பின் நிதானமாக வெளியே விட்டேன். பதறும் இதயத்தின் படபடப்பை குறைக்க முயன்றேன். இந்த மேட்ச் பாய்ன்ட் எனக்கு … Read more

ப்ரேக்கிங் பாய்ன்ட்

நான்: அசோக் வானம் சல்லடையாய் மாறிவிட்டது போல, மழை வெளியே ‘ச்ச்ச்சோ’வென கொட்டிக்கொண்டிருந்தது. ‘பளிச் பளிச்’ என மின்னல் ஒளியும், ‘திடும் திடும்’ என இடி ஒலியும் சீரான நேர இடைவெளியில், விட்டு விட்டு வந்து கொண்டிருந்தன. காற்றும் பலமாக வீசியது. அடித்த காற்றில் ஜன்னல் கதவுகள் படபடவென அடித்துக்கொள்ள, நான் சென்று ஜன்னலை சாத்தி கொக்கியிட்டேன். மணிக்கட்டை ஒருமுறை திருப்பி மணி பார்த்துக் கொண்டேன். மீண்டும் டேபிளுக்கு வந்து, பாதியில் விட்ட வேலையை தொடர்ந்தேன். ஒரு … Read more

வைஷு

எட்டு ஃப்ளோர்கள் கொண்ட, சென்ட்ரலைஸ்ட் ஏ.ஸி செய்யப்பட்ட, அந்த மல்டி நேஷனல் கம்பெனியின் ஏழாவது ஃப்ளோரில் உள்ள, ஒரு குட்டி ரூமுக்குள் நான் தனியாக அமர்ந்திருந்தேன். கையில் இருந்த ரெஸ்யூமில், பையில் இருந்த பேனாவால், கார்ட்டூன் வரைந்து பார்த்துக் கொண்டிருந்தேன். ‘ஹேய்.. வாங்கடா டேய்.. சீக்கிரம் வந்து இன்டர்வியூ பண்ணி.. வீட்டுக்கு அனுப்பி வைங்கடா..’ என்று மனதுக்குள் திட்டிக் கொண்டிருந்தேன். கதவு திறந்ததும் திரும்பிப் பார்த்தேன். இந்தக்கதையின் ஹீரோயின் உள்ளே நுழைந்தாள். என்னைப் பார்த்து ஃபார்மலாக ஒரு … Read more

என் மேல் விழுந்த மழைத்துளி..!!

இன்று.. “டாக்ஸி வந்துடுச்சு..!!” நான் சொன்னதும் என் மனைவி சோபாவில் இருந்து எழுந்து கொண்டாள். அருகில் ரெடியாக எடுத்து வைத்திருந்த அந்த பெரிய சூட்கேசின், ஒரு முனையில் இருந்த பிடியை பற்றிக்கொண்டு, என்னை நிமிர்ந்து பார்த்தாள். “கொஞ்சம் ஹெல்ப் பண்றீங்களா..?” என்றாள். நான் சென்று இன்னொரு பக்கம் பிடித்துக்கொள்ள, அந்த கனமான சூட்கேசை இப்போது எளிதாக தூக்க முடிந்தது. கதவு திறந்து வெளியே வந்தோம். காரின் பின்புற கதவை, ட்ரைவர் தயாராக திறந்து வைத்திருக்க, பெட்டியை உள்ளே … Read more

அசத்த போறது அசோக்..!!

நான்தான் அந்த அசோக்..!! படித்தது பி.ஏ. ஆனால் முடித்தது பி.ஏ கிடையாது. வெறும் ப்ளஸ்டூ தான். அரியர்கள் அதிகமாகிப் போக, பி.ஏவை அம்போ என்று விட்டுவிட்டேன். சொந்த ஊர் மதுரைக்கு அருகே சோழவந்தான். அப்பா அம்மாவுக்கு ஒரே பிள்ளை. ஒரு தம்பி இருந்தான். சின்ன வயதிலேயே தவறிவிட்டான். விவசாயம்தான் தொழில். நிலபுலம் கொஞ்சம் இருக்கிறது. நெல் பயிர் செய்கிறோம். விவசாயத்தையும் நான் உருப்படியாக பார்ப்பதில்லை. அப்பாதான் பார்த்துக் கொள்கிறார். ஒற்றைப் பிள்ளை என்பதால் ரொம்ப செல்லம். நான் … Read more