ராட்சசி – பகுதி 6

Posted on

tamilsex story நே..நேத்து.. கோ..கோவத்துல.. நான் கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்..!! என்னதான் இருந்தாலும் நான் அப்படி பேசிருக்க கூடாது.. நான் பேசினது தப்புன்னு லேட்டாத்தான் எனக்கு புரிஞ்சது..!! ஸோ.. ஸாரி.. மன்னிச்சுடு..!!”

தன் முகத்தையே ஏறிடாமல், தலையை அப்படியும் இப்படியுமாய் சிலுப்பிக்கொண்டு, குரலில் மட்டும் குற்ற உணர்ச்சியுடன், தங்கை தன்னிடம் மன்னிப்பு கேட்டவிதம், அசோக்கிற்கு சிரிப்பை வரவழைத்தது. உதடுகள் பிரித்து மெலிதாக புன்னகைத்தான். அப்புறம் சற்றே குறும்பான குரலில் சொன்னான்.

“பரவால போ.. மன்னிச்சுட்டேன்..!!” அசோக் அவ்வாறு ஏளனமாக சொன்னவிதம், சங்கீதாவுக்கு சற்று எரிச்சலை கிளப்பியிருக்க வேண்டும்.

“ஆனா ஒன்னு மவனே.. தங்கச்சி ஸாரி கேட்டுட்டா.. நமக்கு பணிஞ்சு போயிட்டா.. இனி நம்ம வழிக்கே வரமாட்டா… அப்படிலாம் தப்பு கணக்கு போட்டுடாத..!!”

“ஓஹோ..!! சரி சரி… நீயும் அப்படிலாம் எதும் தப்பா நெனச்சுடாத சங்கு.. அண்ணன்ட்ட ஸாரி கேட்டாச்சு.. அவன் அப்படியே உருகிப் போயிட்டான்.. இனிமே நம்மள வம்பிழுக்கவே மாட்டான்..!! அப்படிலாம் மனசுல ஏதாவது நெனைப்பு இருந்தா.. இப்போவே அதை அணுகுண்டு போட்டு அழிச்சிடு..!!”

அசோக் பதிலுக்கு பதில் பேசவும், சங்கீதா அவனையே சில வினாடிகள் உர்ரென்று முறைத்துப் பார்த்தாள். அப்புறம் முகத்தை அசிங்கமாக சுளித்தவாறு,

“ஏ ச்சே.. போடா..!!” என்று அவனை பிடித்து தள்ளி விட்டாள்.

“அடச்சீய்.. போடீ..!!”

அசோக்கும் பதிலுக்கு கத்திவிட்டு, அறை வாசலை நோக்கி நடந்தான். அவன் அந்தப்பக்கம் நகர்ந்ததுமே, சங்கீதா ஹெட்ஃபோனை காதில் மாட்டிக்கொண்டு, பாதியில் விட்ட வேலையை மீண்டும் தொடர்ந்தாள்.

“டேய்…!! இருக்கியா..?? ம்ம்ம்… என்னது என்னது…??? ஏய்.. இரு இரு இரு.. நீ மொதல்ல இருந்து வா.. ப்ச்.. மொதல்ல இருந்து வா..!! நான் உன்கிட்ட ஐ லவ் யூ சொல்றதுக்கு முன்னாடி.. நீ என் பின்னாடி நாய் மாதிரி நாக்கை தொங்கப்போட்டுட்டு திரிஞ்சியா இல்லையா..?? அதுக்கு மொதல்ல ஆன்சர் சொல்லு இப்போ.. கமான்.. பேசு..!!”

அசோக் அந்த அறையை விட்டு வெளியே வந்தான். வெளியே வந்ததுமே ‘யப்பாஆஆ..’ என்று தலையை ஒருமுறை உலுக்கிக்கொண்டான். தங்கை கிஷோரை பின்னி பெடலெடுப்பாள் என்று அவனுக்கு முன்பே தெரியும். ஆனால் எந்த அளவிற்கு என்பதை இன்றுதான் கண்கூடாக காண்கிறான். தனக்கென்று ஒரு பெண் தேர்ந்தெடுக்கும்போது, தங்கை மாதிரி ஒரு ராட்சஸியிடம் மட்டும் சிக்கிக்கொள்ளக்கூடாது என்று நினைத்துக் கொண்டான்.

சங்கீதாவின் அறையில் இருந்து ஹாலுக்கு வரும் வழியில்தான் தாத்தா பாட்டியின் அறையும் இருக்கிறது. அவர்கள் அறையை அசோக் கடக்கும்போது, உள்ளே இருந்து பாட்டியின் சத்தம் பெரிதாக ஒலிக்க, அசோக் அப்படியே ப்ரேக் போட்டான். பாட்டி என்ன சொல்லுகிறாள் என்று காதை கூர்மையாக்கி கேட்டான்.

“வாக்கிங் போனா நேரா வீட்டுக்கு வர வேண்டியதுதான..?? வர்ற வழில அங்க நின்னுக்கிட்டு.. அவ கூட என்ன பல்லை காட்டிக்கிட்டு பேச்சு வேண்டி கெடக்கு..??” பாட்டி இந்த வயதிலும் தன் பொசஸிவ் புத்தியால் தாத்தாவை போட்டு படுத்திக்கொண்டிருந்தாள்.

“போனவாரம் அவகிட்ட பல்லுவலின்னு சொல்லிருந்தேண்டி.. இப்போ எப்படி இருக்குன்னு கேட்டா.. அதான் பல்லை காட்டினேன்..!!” தாத்தாவும் பாட்டிக்கு பணிந்து போய்த்தான் பேசிக்கொண்டிருந்தார்.

“ம்க்கும்.. இப்படி பதிலுக்கு பதிலு பேசிட்டே இருங்க.. அப்புறம் இருக்குற நாலு பல்லையும் உடைச்சு போட்டுட வேண்டியதுதான்..!! பல்லும் இருக்காது.. வலியும் இருக்காது..!!”

“ஐயே.. இப்போ என்னாயிடுச்சுன்னு இப்படி கத்துற கோமளா..??”

“இங்க பாருங்க.. எனக்கு அதுலாம் தெரியாது.. இனிமே நீங்க வாக்கிங் போறதா இருந்தா இங்க வீட்டுக்குள்ளயே போங்க.. சொல்லிப்புட்டேன் ஆமாம்..!!”

பாட்டி முடிவாக சொல்லிவிட்டு, மூஞ்சியை திருப்பிக் கொண்டாள். பார்த்துக்கொண்டிருந்த அசோக் ‘ஹ்ம்ம்.. எத்தனை வயதானாலும் பெண்கள் பெண்கள்தான்..!!’ என்று பெருமூச்சு விட்டுக்கொண்டான். வாசலுக்கருகே நின்றிருந்த அசோக்கை பாட்டி கவனித்துவிட்டாள்.

“என்னடா..??” என்று எரிச்சலாகவே கேட்டாள்.

ஒட்டுக்கேட்டதை பாட்டி பார்த்துவிட்டாள் என்று அசோக் முதலில் சற்று தடுமாறினான். அப்புறம் அந்த தடுமாற்றத்தை சமாளித்துக்கொண்டு, குரலில் ஒரு கேலியையும் கலந்துகொண்டு, அவர்களுடைய அறைக்குள் தலையை மட்டும் நீட்டியவாறு கேட்டான்.

“ஏன் பாட்டி.. தாத்தா இத்தனை நாள் பல்லை கடிச்சுட்டு ஓட்டிட்டாரு.. இனிமேலா பல்லுவலின்னு ஓடிடப் போறாரு..??” அசோக்கின் கேள்வியில் இருந்த குதர்க்கம் பாட்டிக்கு புரியவில்லை.

“என்னடா சொல்ற.. மண்டு..??” என்று முகத்தை குழப்பமாய் சுருக்கினாள்.

“புரியலையா..?? சரி விடு..!! தாத்தா உன்மேல உயிரையே வச்சிருக்காரு பாட்டி..
தேவை இல்லாம அவரைப்போட்டு இப்படி டார்ச்சர் பண்ணாத..!!”

“அடப்போடா.. என் புருஷனை பத்தி எனக்கே சொல்ல வந்துட்டான்..?? எல்லாம் எனக்கு தெரியும்.. நீ உன் வேலையை பாத்துட்டு போ..!!”

பாட்டி முகத்தை வெட்டியவாறு சொன்னாள். அசோக் சலிப்பாய் தலையசைத்துக் கொண்டான். ‘இந்தப் பெண்களே இப்படித்தான்.. தனக்குரியவனை தானும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.. தன்னைமாதிரி அவனை புரிந்து கொள்ள வேறு ஆளே இல்லை என்று அடமும் பிடிப்பார்கள்..!!’ எப்படியோ போங்க என்று மனதுக்குள் முனுமுனுத்தவாறே அசோக் டைனிங் ரூமுக்கு வந்தான். அங்கே அவனுடைய அப்பா அமர்ந்திருந்த நிலையை பார்த்து சற்றே துணுக்குற்றான்.

கன்னத்தில் கைவைத்து.. கவலையே உருவாக.. தட்டில் கிடந்த தோசையை உண்ணக்கூட மனம் இல்லாமல்.. உறைந்து போய் அமர்ந்திருந்தார் மணிபாரதி..!! ‘என்னாயிற்று இந்த அப்பாவிற்கு..?? இப்படி இடிந்து போய் அமர்ந்திருக்கிறார்..?? அம்மா எதுவும் அவரை திட்டிவிட்டாளா..?? இன்று என்ன.. பெண்கள் ஆண்களை வறுத்தெடுக்கிற தினமா..??’

“டாடிக்கு என்னாச்சு மம்மி.. நீ ஏதும் திட்டிப்புட்டியா..??” அசோக் கிச்சன் பக்கமாக திரும்பி அம்மாவிடம் கேட்டான்.

“அட.. நான்லாம் ஒன்னும் அவரை திட்டலை..!!”

“அப்புறம்..??”

“அவரோட அர்ர்ருமை ரசிகர்ட்ட இருந்து லெட்டர் வந்திருக்கு.. அதை படிச்சதுல இருந்து இப்படி ஊமை மாதிரி உக்காந்திருக்காரு..!!”

“யாரு.. அந்த ஸ்ரீனியா..??”

“ம்ம்.. ஆமாம்..!!”

“மறுபடியும் இவரை திட்டி லெட்டர் போட்டிருக்கானா..??”

“ஆமாண்டா..!!”

பாரதி கடுப்புடன் சொல்லிவிட்டு கல்லில் தோசை மாவை ஊற்றி விரவி விட, அசோக் ‘ஹ்ம்ம்ம்..’ என்று பெருமூச்சு விட்டவாறே தன் அப்பாவிடம் சென்றான்.

“என்ன டாடி.. ரொம்ப திட்டிட்டானா…??”

“ஆமாண்டா.. கன்னாபின்னான்னு திட்டுறான்.. கண்கொண்டு பாக்க முடியலை அந்த லெட்டரை..!! டாடி இத்தனை வருஷமா கதை எழுதிருக்கேன்டா அசோக்.. இந்த அளவுக்கு எவனும் என்னை கேவலமா திட்டுனது இல்ல..!!” மணிபாரதி மிகவும் சோகமாக சொன்னார்.

“ஹ்ம்ம்.. அவனுக்கு என்னதான் பிரச்னையாம்..??”

“என்னத்த சொல்றது.. நான் இனிமே லவ் ஸ்டோரியே எழுதக் கூடாதாம்.. எழுதுன வரை போதுமாம்..!! இனிமேயும் எழுதினா.. பப்ளிக் ந்யூஸன்ஸ்னு என் மேல பொதுநல வழக்கு போடப்போறதா மிரட்டுறான்..!! நான் கதை எழுதுற பேனாவை.. கூவத்துல தூக்கி கடாச சொல்றான்.!!”

“இதுலாம் ரொம்ப ஓவர் டாடி.. உங்க ஸ்டோரி பிடிக்கலைன்னா படிக்காம விட வேண்டியதுதான.. ஏன் இப்படிலாம் பண்றான்..?? நீங்களும் பதிலுக்கு அவனை தாறுமாறா திட்டி ஒரு லெட்டர் போடுங்க..!!”

“இல்ல அசோக்.. அவனை அப்படி திட்டுறதுக்கு எனக்கு மனசு வரலை..!!”

“ஏன்..??”

“ஒருகாலத்துல இந்த ஸ்ரீனி என்னை எப்படிலாம் பாராட்டுவான் தெரியுமா..?? என்னை தெய்வம்னுவான்.. என்னை மாதிரி எழுத ஆளே இல்லைன்னு சொல்வான்..!!”

“ஓ.. அப்புறம் ஏன் இப்போ இப்படி திட்டுறான்..??”

“ஹ்ம்ம்… அப்போ லவ் பண்ணிட்டு இருந்தான்.. பாராட்டுனான்..!! இப்போ லவ் ஃபெயிலியர் ஆகிப்போச்சு.. திட்டுறான்..!!”

“இது என்ன டாடி அநியாயமா இருக்கு..?? அவனுக்கு லவ் ஃபெயிலியர் ஆனதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க..?? விட்டா.. படிக்கிறவங்க வீட்டுல பவர் ஃபெயிலியர் ஆனா கூட உங்களை திட்ட ஆரம்பிச்சுடுவாங்க போல..??” அசோக் கிண்டலாக கேட்க மணிபாரதி மகனை ஏறிட்டு முறைத்தார்.

“ஏன்டா உனக்கு இப்படி ஒரு கெட்ட எண்ணம்..??”

“என்னாச்சு டாடி..??”

“பின்ன.. ஒருத்தன் திட்டுறதையே தாங்க முடியல.. பவர் ஃபெயிலியர்குலாம் திட்ட ஆரம்பிச்சா.. மொத்த தமிழ்நாடேல என் மொகத்துல காறி துப்பும்..!!”

“ஹாஹா..!! ஹ்ம்ம்.. என்னவோ போங்க..!! எனக்கு டைம் ஆச்சு.. உங்க தோசையை நான் எடுத்துக்குறேன்.. நீங்க அப்புறமா சாப்பிட்டுக்கங்க..!!”

அப்பா முன்பிருந்த ப்ளேட்டை இப்போது அசோக் எடுத்துக் கொண்டான். அப்படியே நின்றவாறே சாப்பிட ஆரம்பித்தான். தோசையை விண்டு சட்னியில் நனைத்து தொண்டைக்குள் போட்டான். ஆவி பறக்கிற தோசையை தாங்கிய கரண்டியுடன், டைனிங் ரூமுக்குள் நுழைந்த பாரதி, மகன் சாப்பிட்டுக்கொண்டிருப்பதை பார்த்ததும் பட்டென்று முகம் மாறினாள். அவனுடைய தலையில் நறுக்கென்று குட்டியாவாறே சொன்னாள்.

“அறிவு கெட்டவனே..!!”

“ஆஆஆஆ..!! இன்னைக்கு என்னாச்சு.. யாராவது யாரையாவது திட்டிட்டே இருக்கீங்க..?? நீ எதுக்கு இப்போ என்னை திட்டுற..??” அசோக் தலையை தேய்த்தவாறே அம்மாவிடம் திரும்பி கேட்டான்.

“எத்தனை தடவை சொல்றது.. குளிச்சுட்டுத்தான் சாப்பிடனும்னு..!!”

“ஐயோ.. குளிச்சுட்டேன் மம்மி..!!”

“குளிச்சுட்டியா..?? பொய் சொல்லாத.. பாத்தா அப்படி தெரியல..!!” பாரதி குழப்பமாய் அசோக்கையே மேலும் கீழும் பார்த்தாள்.

“ஆமாம்.. உனக்கு ஒன்னும் தெரியாது..!! தோசையை குடு.. போய் இன்னும் ரெண்டு போட்டு எடுத்துட்டு வா.. போ..!!”

எரிச்சலாக சொன்ன அசோக் தோசையைப் பறித்து தன் தட்டில் போட்டுக் கொண்டான். பாரதி தயங்கி தயங்கியே கிச்சனை நோக்கி நகர்ந்தாள். கிச்சன் வாசலுக்கு சென்றவள், மீண்டும் திரும்பி அசோக்கை ஒரு நம்பிக்கையில்லா பார்வை பார்க்க, அவன் இப்போது வாயில் தோசையுடன் பரிதாபமாக கத்தினான்.

“ஹையோ… நம்பு மம்மி..!! குளிச்சுட்டேன்..!!”

– தொடரும்