அண்ணியின் காதல்

உடல் பயிற்சி செய்ய அதிகாலையிலேயே எழுந்துகொண்டேன். டி-ஷர்ட், ஷாட்ர்ஸ், ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து கொண்டேன். மாடியில் இருந்த என் ரூமை விட்டு கீழே இறங்கி, ஹாலுக்கு வந்தேன். அம்மா கொண்டு வந்து தந்த காபியை உறிஞ்சிக்கொண்டே, அண்ணிக்காக ரம்யாவுக்காக காத்திருக்க ஆரம்பித்தேன்.

அண்ணி ரம்யா அவள் அறையில் இருந்து வெளிப்பட்டாள். அவளும் ஒரு பிங்க் நிற டி-ஷர்ட்டும், ஷார்ட்சும் அணிந்திருந்தாள். கூந்தலை குதிரை வால் மாதிரி தொங்கவிட்டு, ஹேர் பேன்ட் போட்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் அழகாக புன்னகைத்தாள்.

எனக்கு அருகே வந்து அமர்ந்து கொண்டாள். ஷூ ஸ்டாண்டில் இருந்து ஷூவை எடுத்துக் கொண்டே கேட்டாள்.
“சிவா, ரொம்ப நேரமா வெயிட் பண்ணுறியா. ?”
“இல்லை அண்ணி. இப்போதான் வந்தேன். ”
“ம்ம். நல்லா தூங்கினாய ?. 2 நிமிடம்
நான் ரெடியாகிடுவேன். ”

சொல்லியபடி ஷூவை மாட்டிக்கொள்ளும் அண்ணியையே நான் பார்த்தேன். எவ்வளவு அழகாக, கவர்ச்சியாக இருக்கிறாள். ? நயன்தாரா போல வட்டமுகமும், பளிங்கு குண்டுகள் போல கண்களும், கூர்மையான நாசியும், செதுக்கி வைத்தாற்போல சிவந்த அதரங்களும், ஆப்பிள் துண்டுகள் போல கன்னங்களும். அசத்தும் அழகு மட்டும் இல்லை. எவ்வளவு அன்பான, அடக்கமான குணம் இவளுக்கு. ? இதுவரை அதிர்ந்து கூட ஒரு வார்த்தை பேசியதில்லையே. ? எத்தனை பேருக்கு இந்த மாதிரி ஒரு மனைவி அமைய கொடுத்து வைத்திருக்கும். ? ஆனால். ஆனால். இவளைப்போய் அண்ணன் பிடிக்கவில்லை என்கிறானே. ? அறிவில்லாதவன். எனக்கு அண்ணன் மேல் லேசாக ஒரு எரிச்சல் வந்தது.

நானும் என் அண்ணனும் இரட்டை பிறவி. என்னை விட 10 நிமிடம் முன்னே பிறந்தவன். பெயர் ராம். எல்லாவற்றிலும் எனக்கு முன்னாடியிருப்பான். படிப்பில் புலி. நான் சுமார். அண்ணன் படிக்கும் போதே TV யில் ஜாக்கியாக வேலை பார்க்கிறான். கைநிறைய சம்பளம். நான் இன்னும் அரியர்ஸ் முடிக்கவில்லை. வெளியில் படித்துக்கொண்டியிருக்கேன். அண்ணி வசதியான வீட்டு பெண். அண்ணனை பார்த்து பிடித்துப்போய், முறைப்படி பெற்றோர்கள் பேசி முடிவு பண்ணி கல்யாணம் பண்ணிக்கொண்டாள்.

“காபியை முடிச்சுட்டியா சிவா. ? கெளம்பலாமா. ?” அண்ணி எழுந்துகொண்டே கேட்க, நான் கவனம் கலைந்தேன்.
“ம்ம். கெளம்பலாம் அண்ணி. ”
நானும் எழுந்து கொண்டேன். இருவரும் கிளம்ப தயாரானபோது அம்மா உள்ளே இருந்து வந்தாள்.
“சீக்கிரம் வந்திருங்கப்பா. ரொம்ப நேரம் ஓடிட்டு இருக்காதீங்க. ”
“ம்ம். சரிம்மா. ”

நானும் அண்ணியும் வீட்டை விட்டு வெளியே வந்தோம். நான் என் பைக்கை ஸ்டார்ட் செய்ய, அண்ணி பின்சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டாள். என் இடுப்பில் கைபோட்டுக் கொண்டாள். நான் ஆக்சிலரேட்டரை திருக, வண்டி பறக்க ஆரம்பித்தது. வண்டி முன்னால் செல்ல செல்ல, எனது ஞாபகம் பின்னால் சென்றது.

அண்ணிக்கும், அண்ணனுக்கும் ஆறு மாதங்கள் முன்னால்தான் திருமணம் ஆனது. அண்ணன் TV நிலையத்தில் இரவு சிப்டில் இருக்கிறான். சினிமா கம்பெனியில் பார்ட் டைம் வேலை பார்க்கிறான். மீடியா, சினிமா என்று கலை வெறியுடன் அங்கேயே செட்டில் ஆகிவிட்டான். ஒரு வருடம் முன்பு அம்மா அண்ணனுக்கு பெண் பார்க்க ஆரம்பித்தாள். அண்ணன் நிறைய கண்டிஷன் போட்டான். தனக்கு மனைவியாக வரப்போகிறவள் எப்படி இருக்க வேண்டும் என்று அம்மாவுக்கு ஒரு லிஸ்ட் போட்டு கொடுத்தான்.

அண்ணின் அப்பா நேரில் வந்து அண்ணனுக்கு கேட்டு, அண்ணியின் போட்டோவை குடுத்தார். போட்டோவில் பார்த்த அம்மாவுக்கு ரம்யா அண்ணியை ரொம்ப பிடித்து போய் விட்டது. அழகான, அடக்கமான, அன்பான என் அண்ணியை யாருக்குத்தான் பிடிக்காது. ? என் அண்ணனை தவிர. ஆனால் அண்ணியிடம் அண்ணன் எதிர்பார்த்த சில தகுதிகள் இல்லை. அண்ணனுக்கு பாட, நடனம், தமிழ் நன்கு மேடையில் பேசத்தெரிந்த பெண் வேண்டும் என்று கேட்டான். ஆனால் அண்ணி கூச்ச சுபாவம், மேடை தமிழ் பேச வராது. அண்ணிக்கு பாட பேசத் தெரிந்தாலும், அண்ணன் எதிர்பார்த்த அளவுக்கு சரளமாக வரவில்லை.

சினிமா, TV, கலை, இலக்கியம் பற்றிய அடிப்படை அறிவு இருந்தாலும், அண்ணன் எதிர்பார்த்த மாதிரி அண்ணி அதில் எக்ஸ்பெர்ட் இல்லை. தனக்கு நிகராக இலக்கியம், கலை பற்றி பேசும் பெண் வேண்டும் என்றான் அண்ணன். ஆனால் அண்ணிக்கு ஆங்கில மிடியாவில் படித்ததால் அப்படி ஒரு விஷயம் இருப்பதே இப்போது நான் சொல்லித்தான் தெரியும். அப்புறம் அவளுடைய இடுப்பில் இருந்த சின்ன மடிப்பு. கவர்ச்சியாக இருந்தாலும், அண்ணனுக்கு அந்த மடிப்பை பிடிக்கவில்லை. அவனுக்கு மனைவியின் உடம்பு சிக்கென்று இருக்க வேண்டும்.

அம்மாவுக்கு வலிய வந்த பணக்கார வரனை விட்டுவிட மனம் வரவில்லை. அண்ணனிடம் நிறைய பொய் சொல்லி, கல்யாணத்தை நடத்தி முடித்தாள். கல்யாணம் ஆகிவிட்டால் எல்லாம் சரியாகப் போய்விடும் என்று தப்பு கணக்கு போட்டுவிட்டாள். அண்ணனுக்கு அம்மா சொன்ன பொய் எல்லாம் முதலிரவு அன்றே தெரிந்து போனது. அடுத்த நாளே அண்ணியை இங்கே விட்டுவிட்டு TV நிலையம், சினிமா கம்பனி என்று போய்விட்டான்.

அண்ணியுடன் வாழமுடியாது என்று இரண்டு நாள் கடிதம் எழுதி தந்தான். அண்ணியின் அப்பாவும், அம்மாவும் பதறிப் போனார்கள். அம்மா அவர்களுக்கு சமாதானம் சொன்னாள். அண்ணியை அண்ணனுடன் வாழ வைப்பதாக உறுதியளித்தாள். அப்புறம் அம்மா என்னுடைய உதவியை நாடினாள். அண்ணனுக்கு பிடித்தமாதிரி அண்ணியை மாற்றி அவளை கலை,தமிழ் இலக்கியத்தில் தேர்ச்சியடைய வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். நானும் சவாலாக எடுத்துக் கொண்டு அதை செயல்படுத்த ஆரம்பித்தேன்.

அண்ணிக்கு உடற்பயிற்சி கற்றுக் கொடுத்து, அவளுடைய உடம்பை ஷேப்பாக மாற்றுவதுதான் எனது மிக முக்கியமான வேலை. காலையும், மாலையும் ஜாகிங், எக்சர்சைஸ். அப்புறம் வாரத்திற்கு இரண்டு நாள் ஸ்விம்மிங் கிளாஸ். அதில்லாமல் அண்ணியை தமிழ், நடன க்ளாசுக்கும், நாடக பட்டிமன்ற க்ளாசுக்கும் அழைத்து சென்று, திரும்ப கூட்டி வருவதும் அன்றாட வேலை. அம்மாவின் அனுமதியுடனே அண்ணியை இரண்டு மூன்று முறை அழகு நிலையத்துக்கு அழைத்து சென்று, அந்த சூழ்நிலையை அவளுக்கு பழக்கமாக்கினேன். பேசன் மாடல் கலையை அண்ணிக்கு கற்றுக் கொடுத்தேன். அண்ணி கொஞ்சம் கொஞ்சமாக அண்ணனுக்கு பிடித்த மாதிரி மாறிக் கொண்டிருக்கிறாள்.

இந்த ஆறு மாதத்தில் நானும் அண்ணியும் நல்ல நண்பர்களாக மாறிப் போனோம். அண்ணி,” எனக்கு உன்னையும் உன் அண்ணன் ராமையும் பார்க்க ஒரே மாதிரி தான் இருக்கு. உன்னை முதலில் பார்த்துயிருந்தால் உன்னை தான் கல்யாணம் பண்ணியிருப்பேன். உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் “ என்றாள்.

அண்ணி சொன்னது எனக்கு ரொம்பவே பிடித்து போனது. இவளை விட நல்ல பெண் அண்ணனுக்கு கிடைக்கமாட்டாள் என நான் உறுதியாக நம்பினேன்.

அண்ணியும் என் மேல் அன்பை பொழிந்தாள். அவளுக்காக. புருஷனுடன் அவள் சந்தோஷமாக இருப்பதற்காக. நான் நிறைய முயற்சி எடுத்துக்கொண்டு கஷ்டப்படுவதால், அண்ணிக்கு என்மேல் ஒரு தனிப்ரியம் வந்திருந்தது. ஆனால் சில நாட்களாக அண்ணியின் அந்த ப்ரியம் எனக்குள் ஒரு கலக்கத்தை உண்டு பண்ணியிருந்தது. அவ அழகு என்னை என்ன மோ பண்ணி, தூக்கத்தை கெடுகிறது. அண்ணி கூடிய சீக்கிரம் அண்ணனுடன் சென்றுவிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டேன்.

ஒரு பத்து நிமிடத்தில் அந்த பார்க் வந்தது. வண்டியை வெளியே நிறுத்திவிட்டு நானும், அண்ணியும் பார்க்குக்குள் நுழைந்தோம். பார்க்கின் உட்புறமாக இருந்த அந்த பெரிய வட்ட சாலையில் ஓட ஆரம்பித்தோம். அந்த அதிகாலை நேரத்தில், அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஓரிருவரை தவிர அந்த பார்க் மிக அமைதியாக, ஆள் நடமாட்டமில்லாமல் இருந்தது. நான் அண்ணியை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே ஓடினேன். அண்ணி மிகவும் என்ஜாய் பண்ணி ஜாகிங் செய்தாள். ஆறுமாதத்தில் அண்ணி ரொம்ப தேறி விட்டாள். எனக்கு இணையாக அந்த பார்க்கை எட்டு ரவுண்டு அசால்ட்டாக அடிக்கிறாள். என்னுடய ட்ரைனிங் என்று எனக்கு கொஞ்சம் பெருமையாக கூட இருந்தது.

ஒரு பத்து நிமிடம் ஓடி முடித்ததும் அண்ணி களைத்து போய் அந்த மரப்பெஞ்சில் உட்கார்ந்து கொண்டாள். நானும் அண்ணிக்கு அருகே சென்று அமர்ந்து கொண்டேன். அண்ணி வாட்டர்கேனை திறந்து தண்ணீரை தொண்டைக்குள் சரித்துக் கொண்டாள். நான் அவளையே கண்ணிமைக்காமல் பார்த்தேன். அண்ணியின் தொண்டைக்குமிழ் மேலும் கீழும் ஏறி இறங்குவது பார்ப்பதற்கு அழகாக இருந்தது. அப்புறம் அவளுடைய மூச்சிரைப்புக்கு தகுந்த மாதிரி விரிந்து சுருங்கும் அவளுடைய மார்புகள்.

Scroll to Top