பயபுள்ளைக்கு ஆர்வத்தை பாரு

ஏய் மீனு நீ ஜீவாவ உன் ஸ்கூட்டியிலே கொண்டு போமா .

மீனாக்ஷி என்னது எங்கூடயா என்னமா சொல்ற அவனுக்கு நான் வேலை பாக்குற காலேஜ்ல ரகசியமா ரேக்கமண்ட் பண்ணி அட்மிஷன் வாங்கி கொடுக்கும் முன்ன என்ன சொன்னேன் நான் அவனுக்கு அக்கான்னு தெரியவே கூடாதுன்னு தானே இங்க பொறுக்கி பசங்க கூட சேந்து ஒரு வருஷத்தை வீனாகினான் இப்படியே போனா நல்லா இருக்காதே அவன் புயூச்சரயும் பார்க்கணுமேன்னு தானே அட்மிஷனுக்கு ஏற்பாடு பண்ணேன் இதில இவனை நான் கூட்டிட்டு போனா நான் இவன் அக்கான்னு தெரிஞ்சிடும் .

அது வேணாம் அப்றம் இவன் பண்ணுற தப்புக்கு நான் ரெஸ்பான்சிபில் பண்ணனும் .

எல்லாத்தையும் மொபைலில் கேம் விளையாடிக்கிட்டு எனக்கும் அந்த அம்மா வேணிக்கும் அவ பொண்ணு மீனாக்ஷிக்கும் எந்த தொடர்பும் இல்லை என உலகத்தையே மறந்து விளையாடுகிறான் .

மீனு : பாரும்மா இவளவு நேரம் நாம யாரை பத்தி பேசுறோமுன்னு கூட கவனிக்கமா இருக்கிறான் பாத்தீங்களா .
வேணி : டேய் போய் குளிச்சிட்டு வாடா இன்னைக்கு காலேஜ் மோத நாள் அதுவுமா என்ன விளையாட்டு .

ஜீவா :அம்மா அவ பேசுரதை கேட்டா நான் பண்ண தப்புக்கு எனக்கு எங்க காலேஜ் என்ன டிஸ்மிஸ் பண்ண மாதிரி இல்லை இருக்கு .

வேணி : டேய் இனிமே அவளை அவ இவன்னு சொல்லாதே நீ படிக்க போற காலேஜ்ல லெச்சர் தெரியும் இல்ல அப்றம் வீட்டுக்கு வந்தா அக்கான்னு கூப்பிடு உன்னை விட எட்டு வயசுக்கு மூத்தவ என்கிற மரியாதை ஆவது கொடுடா அப்றம் அங்க போயி பழைய காலேஜ் மாதிரி ஹீரோ ஆவ ட்ரை பண்ணாதே இப்போ செகண்ட் இயர் பாத்து நடந்துங்க ஒழுங்கா படிப்பில மட்டும் கவனத்தை வை .

மீனு : ஹிம் அம்மா அங்கேயும் இருக்காங்க சில புறம்போக்கு பசங்க அவனுங்க கூட. சேராம இருந்தாலே ஆடிமேட்டிக இவன் உருப்படுவான் .

வேணி : சரி சரி சொல்ல மறந்துட்டேன் மாப்ள போன் பண்ணார் நீ குளிக்க போய்ட்டதா சொன்னேன் .

மீனு : மாமக்கு வேற வேலையே இல்லையா அடிக்கடி போன் பண்ணிக்கிட்டு . காலேஜ்ல பல பொறுக்கி பசங்கள சிம்பிளா டீல் பண்ண முடியுது இவரோட ரெண்டு தேட் ஸ்டெடன்ட் ரெட்டை பசங்கள டீல் பண்ற வேலை இருக்கே .

வேணி : ஏய் என்னடி ஓவரா பேசிக்கிட்டே போகுற அதுங்க ரெண்டுபேரும் போறந்தத்தில் இருந்தே நான் தானேடி தூக்கி வளக்குறேன் நீபெரிய காலேஜ் பசங்களுக்கு டீச்சரா இருந்தாலும் அதுங்களுக்கு நான் தானே பாடம் சொல்லிகுடுக்குறேன்.

மீனு : ஒத்துக்குறேன் தாயே மகமாயி எனக்கு டைம் ஆச்சு பசங்க ஸ்கூல் விட்டு வந்தா அதிகமா ஸ்நாக்ஸ் ஒன்னும் கொடுக்கவேண்டாம் வாழைப்பழம் எக் ஏதாவது கொடுங்க .

வேணி : அப்பா எனக்கு தெரியும் நீ மாப்பிள்ளைக்கு காள் பண்ணி பேசு அவன் நீ கூப்பிடாம போனா தவிச்சு போவான் .

மீனு : உங்க அண்ணன் பையன் என்கிறதால சப்போர்ட்டா சரி நான் அப்பறம் பேசலான்னு மெசேஜ் பண்ணியாச்சு .கிளம்புறேன் டேய் ஜீவா சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கில்ல அங்க அங்க சில ஸ்டுடென் டீச்சரச ஏதாவது சொல்லி கமெண்ட் பண்ணுவாங்க சப்போஸ் என்னையும் பேசினாலும் பேசுவாங்க அதை கேட்டு உனக்குள்ள தூக்கிக்கிட்டு இருக்கிற சிங்கத்தை தட்டி எழுப்பி சண்டைக்கு போய்டாதே எது நடந்தாலும் பேசினாலும் இந்த காதில வாங்கிட்டு அந்த காதில விட்டுடு .

ஜீவா : ஒன்ன பத்தி பேசுனா நான் எதுக்கு சண்டைக்கு போனும் என்னை பத்தி பேசுனா தானே சண்டைக்கு போனும் .

மீனு : உன்கிட்ட சொன்னேன் பாரு .

வேணி : ஏய் நில்லும்மா நில்லு .
நாய் கண்ணு நரி கண்ணு பூனை கண்ணு பேய் கண்ணு எல்லா கண்ணும் பட்டுடாம . ம்ம்

மீனு : து து து போதுமா .

ஜீவா : இதெல்லாம் கொஞ்சம் ஓவரும்மா என்னைக்கும் சுத்தி சுத்தி போடுறீங்க ரொம்ப அழகு தான் கண்ணு பட்டுட போகுது .

மீனு அவனை முறைத்து பார்க்க ஜீவா வாயை மூடினான் .

மீனு : மா நான் வரேன் ..

அவள் கிளம்பிய பின் .

வேணி : என்னடா என் பொண்ணுக்கு என்ன கோறச்சல் அவளை மாதிரி அழாகான ஒரு பொண்ண இந்த ஊர்ல காட்டுடா .

ஜீவா : போதும் போதும் அவ என்னடான்னா எங்க அம்மா மாதிரி அழகான அம்மா ஊர்ல கட்டுடான்னு சொல்றா நீங்க என்னடான்னா என் பொண்ணு மாதிரி அழகான பெண்ணை காட்டுன்னு சொல்ற எனக்கும் டைம் ஆச்சு வாறேம்மா .

வேணி : டேய் ஆள்தி பெஸ்ட் டா.

ஜீவா : தேங்க்ஸ் மா ..

ஜீவா : அவன் அப்பா படத்து முன்னாடி கும்பிட்டிட்டு பஸ் ஸ்டாப்புக்கு போக .

பஸ்ஸும் வந்தது .
அதில பாட்டும் போட்டார்கள் .

ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே அழகுக்கு இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே ….
…. முதலாம் பார்வையிலே மனதை இழுப்பாளே ….
மரகத சோம்பல் முறிப்பாளே புல்வெளி போல சிரிப்பாளே …. அவள் கண்ணத்தின் குழியில் அழககழகா சிறு செடிகளும் நடலாம் விதவிதமாய் மரதகம் தாங்கும் மலர்போலே …தனியொரு வாசம் அவள் மேலே …
அவள் கடந்திடும் போது பல தலைகளும் திரும்பும் ..இந்த பாடல் வரிகள் கேக்கும்போது அவன் அம்மா அவன் அக்காவை பத்தி சொன்னது ஞாபகம் வர அவனும் சிரித்து விட்டு காலேஜ் வர .

டிப்பாட்மெண்ட் எங்கே என கேட்டு அங்கே கொஞ்ச சீக்கிரமா போய் உக்காந்தான் .

ஹலோ அது என் சீட்டு .

ஜீவா : சாரி .
அவன் மேலும் அங்கே உக்காந்தா பிரச்சனை தான் என வெளியே வந்தான் .

அப்றம் இன்னொருவன் வந்து யார் என விசாரித்து ஹாய் நான் பிரபா உள்ள வா
நிறைய சீட் காலிதான் என் பக்கத்தில .
உக்காரு என சொல்ல தேங்க்ஸ் நண்பா இல்ல ப்ரோபசர் வரட்டும் அப்புறமா வரேன் நேத்தே அப்போய்மெண்ட் பண்ணிட்டேன் கொஞ்சம் அரேஜ்மெண்ட் பண்ணிக்கிட்டு இன்னைக்கு வந்துருக்கேன் .

பிரபா : ஓக்கே பாய் பட் வரும்போது என் பக்கத்துல உக்காரனும் பாய் .

ப்ரோபிசர் வந்து அப்போய்மெண்ட் லெட்டர் வாங்கி அவனை உள்ளே அழைத்துகொண்டு போய் எல்லாருக்கும் இன்டடூஸ் பண்ணி வைத்துவிட்டு உக்காரா சொல்ல பிரபா கையை காட்டி கூப்பிட அவன் அவன் அருகே போய் உக்காந்தான் .

இண்டெர்வெல் .

சந்தோஷ் : டேய் பிரபா அங்க பாருடா மீனாக்ஷி மேம் .

பிரபாவோ எங்கடா எங்கடா என அவன் தலையை அழகாய் சீவி விட்டு கேக்க .

ஜீவா : மிரண்டு போனான் டேய் ஜீவ எவனாவது ஏதாவது பேசினா உனக்குள் இருக்கும் சிங்கத்தை தட்டி எழுப்பாதே .
அக்கா சொன்னது நினைவு வர பிறகு அவர்கள் எதை பேசுகிறார்கள் என கவனிக்க .

சந்தோஷ் : பயபுள்ளைக்கு ஆர்வத்தை பாரு .

பிரபா : டேய் சந்தோஷ் உனக்கு இதே வேலையா போச்சு ஒரு நாள் இல்ல ஒரு நாள் .

சந்தோஷ் : டேய் புது பையன் பாக்குறான் பேச்சை மாத்து .

பிரபா : ம்ம்ம்

Scroll to Top