இனிக்கும் இல்ல‍ற வாழ்வில் – ஆணுக்கு 30 நொடிகள், பெண்ணுக்கு 15 நிமிடம்

நல்ல குடும்பம் பல்கலைக் கழகம் என்பது ஆன்றோர்கள் வார்த்தை. நல்ல குடும்பம் பல்கலைக்கழகமாக
திகழ தேவைப்படும் அடிப்படை பண்பு என்ன‍வென்றால், கணவன் மனைவி, வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து, தொட்டுக்கொண்டும் வா ழ்வதே ஆகும். நல்ல‍ இல்ல‍ற வாழ்வினை வெற்றி கொள்பவ ர்களே வாழ்க்கையின் வெற்றியாளர்களாக சமுதாயம் கொ ண்டாடுகிறது.
ஆண்களின் செக்ஸ் தூண்டுதலுக்கும், பெண்களின் செக்ஸ் தூண்டுதலுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. உடலளவி லும் மன அளவிலும் கூட மாறுபாடுகள் உண்டு. ஆண்களுக்கு செக்ஸ் தூண்டுதல் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் மாதிரி உடனடியாக வந்துவிடும். பெண்களுக்கு தம் பிரியாணி போல செக்ஸ் உணர்ச்சி வரு வதற்கு நேரமாகும். வந்தால் நீடித்த நேரம் இருக்கும்.

உணர்ச்சி வசப்படுவதிலும் வித்தியாசம் இருக்கிறது. உலக அளவில் நடந்த ஆரா ய்ச்சியில் ஆண்கள் விரை வில் உணர்ச்சிவசப்படுகிறார்கள். அதிக பட்சம் 30 நொ டிகளில் தயாராகிவிடுகிறார்கள். பெண்களுக்கு செக்ஸ் உணர்வு ஏற்படுவதற்கு குறைந்தது 10 முதல் 15 நிமிடம் தேவை. ஒரு மாட்டு வண்டி நகர வேண்டும் என்றால் இரு மாடுகளும் இழுக்க வேண்டும்.
1 மாடு சரியாக இழுக்கவில்லை எனில் வண்டி நகராது. அது போலத்தான் செக்ஸ் உணர்வும். இருவரும் சரியாக இயங்கி னால்தான் செக்ஸ் வாழ்க்கை சுகமாக அமையும். மனைவி யை தயார்படுத்த கொஞ்ச நேரம் ஒதுக்க வேண்டும். முத்தம், லேசான தடவுதல் போன்ற இதமான செய ல்களை செய்து பேசிக் கொண்டிருக்க வேண்டும்.

மனைவிக்குப் பிடித்த விஷயங்களை மட்டும் பேச வேண்டும். எந்த நேரத்தில் எதை பேச வேண்டும் என்ற தெளிவும் இருக்க வேண்டும். பிடி க்காத விஷயங்களை பேசினால் மனைவியின் மனநிலை மாறி அன்று செக்ஸ் நடக்காமல் போக வாய்ப்புண்டு . ஆண்கள் ஓர் உணர்வில் இருந்து அடுத்த உணர்வுக்கு எளிதாக மாறிவிடு வார்கள்.
பெண்களின் உணர்வுநிலையை மாற்றுவதுகடினம். அன்று அவர்கள் வருத்தப்ப டும்படி நடந்து கொண்டால் நாள் முழுவதும் அவர்களின் மனதில் அந்த வருத்தமானது இருக்கும். காலையில் மனை வியை திட்டி விட்டு, இரவில் ‘படுக்கைக்கு வா’ என்றால் காரியம் நடக்குமா? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஜனன உறுப்பைக் கொண்டு செய்வது மட்டும் செக்ஸ் என நினைத்தி ருப்ப வர்கள் அதிகம்.
செக்ஸுக்கு முன்னும் பின்னும் பல விஷயங்களும் மன நிலைகளும் உண்டு. எல்லாம் சேர்ந்ததுதான் மன்மதக்க லை. மற்றவர்களுக்குத் தெரியாமலே மனநிலை யை அறி ந்து கொள்ள தம்பதி இருவரும் செக்ஸ் சிக்னல்க ளை தெரி ந்து வைத்திருக்கவேண்டும். மனைவி விருப்பத்தில் உள்ளா ரா? இல்லையா? இதை தெரிந்து கொள்ள சிக்னல்கள் உதவும்.

மனைவிக்கு சிலநேரம் செக்சில் விருப்பம் இல்லையெனில், புரி ந்து கொண்டு தள்ளி இருப்பது நல்லது. கட்டாயப்படுத்தி உறவு கொள்ள நினைக்கக் கூடாது. தம்பதி இடையே தகவல் பரிமா ற்றம் எளிதாகவும் சுமுகமாகவும் இருந்தால் தாம்பத்திய வா ழ்க்கையை எந்தப் பிரச்னையும் இன்றி சுகமாக அனுபவிக்கலாம்.
தாம்பத்தியத்தின் வெற்றிக்கும் தொடர் வெற்றிக்கும் கணவன், மனைவி இருவரின் உடல் நலமும் மனநலமும் முக்கியம். அன்றாட உணவில் ஊட்டச் சத்துக்கள் நிறைந்த–புரதம், கொழுப்பு, வைட்ட மின்கள், தாது ப்பொருட்கள் நிறைந்த சைவ / அசைவ உணவுக் கூறுகளையும், காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றையும் உண்ண வேண்டும். எந்தச் சந்தர்ப் பத்திலும் பாலியல் சக்தியைப் பாதிக்கக் கூடிய அலோபதி மருந்துக ளை உண்ணக்கூடாது. உணவு உண்ட ஒரு மணிநேரத்திற்குள் உட லுறவு செய்வதுகூடாது. இதனால் மூட்டு உபாதைகளும், வேறு பல உடல்நலக்கோளாறுகளும் ஏற்படும்.

உறவுக்குமுன் இனிமையான உரையாடலும், உணர்வுபறிமாறலும், முன்விளையாடலும் உறவு முழு மை பெற உதவும். தாம்பத்தியம் ஓர் இனிய சங்கீதம். இசைப்பதும், ரசிப்பதும் மென்மையாய் நிதான மாய் அமைய வேண்டும் அவச ரங்களால் தாம்பத்தியம் அரை குறை யாக அலங்கோலமாக ஆகி விடும். அன்றாட வாழ்வில் அலை யலையாய் வரும் குடும்ப பிரச்ச னைகளில் கணவன் மனைவியரி டையில் கருத்துவேறுபாடுகள், மனச்சோர்வுகள், மன இறுக்கங்கள் போன்றவை ஏற்படும். அது நீடிக்கக் கூடாது. பரஸ்பரம் புரிதலோடு பேசி த் தீர்க்க வேண்டும். மனஒற்றுமை ஏற்படாமல் உடல்களால் மட்டும் இயங்கி தேகவேட்கையைத் தணிக் க முயற்சிப்பது நல்ல தல்ல.
மேலும் ஆழ்ந்த மனப்பாதிப்புகள் தாம்பத்திய உறவுக்கு பெரும் எதிரி. தாம்பத்தியத்தில் எந்திரத்தனங்களும், எல்லைமீறல்களும் இனி மைதராது. அடிக்கடிவரைமுறையின்றி உறவு கொள்ள விரும்புவ து ஆரோக்கியத்தைச் சீர்குலைக்கும். தாம்பத்திய உறவில் ஏதாவது ஒரு வரையரையைக் காலப்போக்கில் தம் பதியர்கள் தாங்களாக வே நிர்ணயம் செய்துகொள்வது முக்கியம்.

வயது அதிகமாகும் போது. தாம்பத்திய உறவு இயலாமல் போய்விடுமோ என் ற அச்சம் தேவையற்றது. உடலுறுவு க்கு வயது ஒரு தடை அல்ல. கணவன் மனைவியின் அந்தரங்கமான இல்லற வாழ்வில் ஒருவர் விருப்பத்தை மற் றொருவர். புரிந்து கொள்ள வேண்டும். இப்படிப்பேசினால் அநாகரீ கம் அப்படிச்செய்தால் அநாகரீகம் என்று எண்ணத் தேவையில் லை. இருவரது விருப்பங்களி ல் ஆரோக்கியமான அனைத் துமே, சுகமான அனைத்துமே பாலியல் வாழ்க்கை நெறிப்படி சரியானது தான். கணவனுக் கும் மனை விக்கு ம் தாம்பத்திய தாகம் ஒரே அலைவரிசையில் இருப்பதில் லை. ஆணுக்கு ஆவல் அடிக்கடி ஏற்படும். பெண்ணுக்கு விருப்பமில்லாத போது தொல்லை தரக்கூடாது என்றெண்ணி அடக்கிக்கொள்கிறா ன். இது தொட ர்கதையானால் மனைவி மீது ஒருவித வெறுப்பு ஏற்படுவது தவிர்க் கமுடியாது.

எனவே பெண்கள், ஆண்களின் மனநிலை யறிந்து இயன்றளவு தங்களை சரிசெய்து கொள்ளுவது இல்லறத்தை இனிக்கச் செய்யும். அடிக்கடி உடலுறவு கொள்ள விரும்பும் பெண்களும் உண்டு. ஆண்கள், அவர்களது விருப்பம் அறிந்து உதாசீன ப்படுத்தாமல் தங்களை சரி செய்து கொள் ள வேண்டும். பரஸ்பர மன விருப்பம், தே வை அறிந்து உடல் எழுச்சியை வரவழை த்து தாம்ப த்தியம் மேற்கொள்வது தம்பதியரிடம் என்றென்றும் இறுக்கமான பிணைப்பையும், இணைப்பையும் உறுதிப்படுத்தும்.