என் சேஃப்டிக்கு..! 2

“எவ்வளவு நேரம் வெயிட் பண்ணுறது..?” என்றாள் எரிச்சலாக.

“அதான் சொன்ன நேரத்துக்கு வந்துட்டனே அபி..?” என்றேன் நான் குழைவாக.

“ஆமாம்.. கிழிச்ச..!! எப்படி அவனை கழட்டிவிட்ட..?”

“டிசன்ட்ரினு சொன்னேன்..!!”

“ச்சேய்.. கருமம்..!! வேற நல்ல ஐடியாவே கிடைக்கலையா உனக்கு..?”

“நீதான சொன்ன..?”

“ஒரு பேச்சுக்கு சொன்னா.. அதையே போய் அவன்கிட்ட சொல்வியா..? சரி.. வா..!!” என்ற அபி, பட்டென்று என் கையை பிடித்து இழுத்தாள்.

“எங்கே..?”

“வான்றேன்ல..? வா..!!”

சொன்னவள் என்னை அந்த காம்ப்ளக்சுக்குள் இழுத்து சென்றாள். அது ஒரு எட்டு ப்ளோர் கொண்ட பெரிய காம்ளக்ஸ். எல்லா ப்ளோர்களிலும், கடைகள்.. ரெஸ்டாரன்ட்கள்.. திரள் திரளாய் ஜனங்கள்.. மெட்டல் டிடக்டர் வைத்து சோதனை செய்த பிறகே எங்களை உள்ளே அனுமதித்தார்கள். அபி என்னை இழுத்து சென்று, லிஃப்ட் முன்னால் நிறுத்தினாள். ‘என்ன வாங்கப் போற..?’ என்ற என் கேள்விக்கு முறைப்பை பதிலாக தந்தாள்.

லிஃப்ட் வந்ததும் ஏறிக்கொண்டோம். எங்களோடு சேர்ந்து ஒரு கூட்டமே ஏறிக்கொண்டது. அபி எட்டாவது ஃப்ளோர் பட்டனை அழுத்தினாள். ‘எட்டாவது ஃப்ளோரில் என்ன இருக்கிறது..?’ என்று கேட்க நினைத்தேன். அவளுடைய முறைப்பான மூஞ்சியை பார்த்ததும் கேட்க தோன்றவில்லை. ஒவ்வொரு ஃப்ளோராக ஆட்கள் இறங்கிக்கொள்ள, எட்டாவது ஃப்ளோரில் லிஃப்ட் காலியானது. நானும், அபியும் மட்டும்தான்.

லிப்டை விட்டு வெளியே செல்ல முயன்ற என்னை, அபி மீண்டும் லிஃப்டுக்குள் கையை பிடித்து இழுத்தாள். மீண்டும் கிரவுண்ட் ஃப்ளோர் பட்டனை அழுத்தினாள். ‘இவளுக்கு என்ன லூசா பிடித்திருக்கிறது..?’ என்று மனதுக்குள் நினைத்தேன். ஆனால் அந்த நினைப்பு எவ்வளவு தவறு என்று அடுத்த வினாடியே எனக்கு புரிந்து போனது.

லிப்ட் கதவு மூடியதுதான் தாமதம்.. அபி பாய்ந்து வந்து என் உதடுகளை கவ்விக்கொண்டாள். ஆவேசமாக உறிஞ்ச ஆரம்பித்தாள். அவளுடைய மார்புப்பந்துகள் என் நெஞ்சில் உருள, அவளது கைகள் என்னை இறுக்கி அணைத்து, என் முதுகை பிசைய, அவளது செவ்விதழ்கள் என் தடித்த இதழ்களுக்குள், எசகுபிசகாக சிக்கிக்கொள்ள, நான் கிறங்கிப் போனேன். எதுவுமே செய்யத் தோன்றவில்லை. அமைதியாக அபியின் ஆவேசத்துக்கு ஒத்துழைத்தேன்.

அபிக்கு செதுக்கி வைத்த மாதிரி மெல்லிய உதடுகள். இயல்பாகவே சிவந்திருக்கும். இதில் லிப்ஸ்டிக் வேறு போட்டு, மேலும் சிவப்பாக்கி வைத்திருப்பாள். எப்போதுமே ஒருவித ஈரப்பசையுடன் காட்சியளிக்கும். தேனோ அல்லது தேன் மாதிரி எதோ ஒரு திரவத்தையோ அந்த உதடுகள் சுரக்கும். உறிஞ்சிப் பார்க்கும் எனக்குத்தான் அதன் உண்மையான சுவை தெரியும். அபியை முத்தமிடுவது எப்போதுமே எனக்கு ஒரு இனிய சுகானுபவம்.

இப்போதும் அப்படித்தான். ஆனந்தமாக அவளை முத்தமிட்டேன். அவளுடைய உதடுகள் தந்த மதுவை உள் வரை உறிஞ்சினேன். அந்த மது தந்த போதை, சுர்ர்ர்… என மூளையில் ஏற, அந்த சுகத்தை தாங்காமல் தத்தளித்தேன். எல்லாமே சில விநாடிகள்தான். மூன்றாவது ஃப்ளோரில் லிஃப்ட் நின்று, கதவு திறந்துகொள்ள, அபி என்னை தள்ளிவிட்டு, லிஃப்டின் இன்னொரு மூலையில் சென்று நின்றுகொண்டாள். ஆட்கள் லிஃப்டுக்குள் நுழைய, அபியோ எனக்கும் அவளுக்கும் சம்பந்தமே இல்லாதது மாதிரி, எங்கேயோ பார்த்தாள். அவளுடைய குறும்பு உண்மையிலேயே எனக்கு முகத்தில் புன்னகையை வரவைத்தது.

அபி எப்போதும் இப்படித்தான். எந்த நேரத்தில் என்ன செய்வாள் என்று கணிப்பது கடினம். அவளுடைய இம்சை தாங்க முடியாமல், அவளுடனான காதலை ரீ-கன்சிடர் செய்யலாமா என நான் யோசிக்கும்போதெல்லாம், இந்த மாதிரி முத்தம், அணைப்பு என்று ஏதாவது சர்ப்ரைஸ் கொடுத்து, என்னை மீண்டும் காதல் கடலுக்குள் ஆழமாய் மூழ்கடித்து விடுவாள். எல்லா சேட்டையும் செய்துவிட்டு, எப்படி பச்சைக் குழந்தை மாதிரி முகத்தை வைத்திருக்கிறாள் பாருங்கள்..?

“கிஸ் பண்றதுக்குத்தான் லிஃப்டுக்குள்ள கூட்டிட்டு போனியா..?” கிரவுண்ட் ப்ளோரில் இறங்கியதும், கிசுகிசுப்பான குரலில் அபியிடம் கேட்டேன்.

“ம்ம்..” அவள் கேஷுவலாக சொல்லிவிட்டு முன்னே நடந்தாள்.

“ஏய்.. எங்க போற..?”

“பசிக்குதுடா.. ஏதாவது சாப்பிடலாம்..!!”

சொன்னவள் பிஸ்சா ஹட்டுக்குள் நுழைய, நான் பின் தொடர்ந்தேன். மெனு கார்ட் வாங்கி என்னிடம் நீட்டினாள்.

“என்ன சாப்பிடலாம் சொல்லு..” என்றாள்.

நான் ஒரு ஐந்து நிமிடம் செலவழித்து,

“எனக்கு ஒரு ஸ்பைசி சிக்கன் சீஸ் பிஸ்சா.. உனக்கு..?” என்றேன். அவள் உடனே பேரரிடம் திரும்பி,

“டூ டொமாட்டோ பாஸ்தாஸ் வித் கார்லிக் ப்ரெட்..” என்றாள்.

பேரர் நகர்ந்துவிட எனக்கு ஆத்திரமாக வந்தது. நான் ஒன்று சொன்னால், இவள் ஒன்று ஆர்டர் செய்கிறாளே..?

“நான் பிஸ்சா கேட்டேன் அபி..” என்றேன் கடுப்பான குரலில்.

“பிஸ்சாலாம் கிடையாது.. பாஸ்தா நல்லாருக்கும்.. சாப்பிடு..!!” என்றாள் அவள் முறைப்பாக.

“அப்புறம் எதுக்கு எங்கிட்ட ‘என்ன வேணும்’னு கேட்ட..?”

“சும்மாதான்.. உன் டேஸ்ட் எவ்வளவு கேவலமா இருக்குன்னு தெரிஞ்சுக்கதான் கேட்டேன்.. ஏற்கனவே மாடு மாதிரி இருக்குற..? இதுல பிஸ்சா வேணுமா உனக்கு..? வெயிட்டை குறை..!!”

“ம்ம்.. பாஸ்தா சாப்பிட்டா வெயிட் குறையும்னு யார் உனக்கு சொன்னது..?”

நான் கடுப்புடன்கேட்க, அவள் கவலையே இல்லாமல் கலகலவென சிரித்தாள். எனக்கு எரிச்சலாக வந்தது. கொஞ்ச நேரத்தில் பாஸ்தா வர, வேறு வழியில்லாமல் அதை விழுங்க ஆரம்பித்தேன். ஃபோர்க்கில் பாஸ்தாவை அள்ளி வாய்க்குள் திணித்துக் கொண்டே அபி சொன்னாள்.

“சாப்டுட்டு அப்டியே படத்துக்கு போறோம்.. டிக்கெட்லாம் வாங்கிட்டேன்..!!”

“படத்துக்கா..? சொல்லவே இல்லை.. என்ன படம்..?”

“டேட்ஸ் நைட்..”

“இங்க்லீஷ் படமா..? பலான ஸீன் இருக்குமா..?”

“ச்சீய்.. டர்ட்டி மைண்டட் டாங்க்கி..!! அதெல்லாம் கிடையாது.. டீசன்ட் மூவி..!!”

“போ அபி.. நான் வரலை..!!”

“ஏன்..?”

“ரொம்ப போரடிக்கும்.. எனக்கு ஒரு எழவும் புரியாது.. நீ மட்டும் கெக்கக்கெக்கேன்னு இளிச்சுட்டு இருப்ப..?”

“எனக்கு புரியுது.. இளிக்கிறேன்..!!”

“ஓஹோ.. அப்ப போ..!! போய் நீ மட்டும் இளிச்சுட்டு வா..!! நான் வரலை..!!”

“நெஜமாத்தான் சொல்றியா..?”

“யார் மேல சத்தியம் பண்ணனும்..?”

“ஓகே.. நீ வரவேணாம்.. நான் மட்டும் போறேன்.. என்ன.. படத்துக்கு நீ வந்தா.. இப்போ லிஃப்ட்ல தந்தனே.. இந்த மாதிரி சூடா ரெண்டு கிஸ் தரலாம்னு நெனச்சேன்.. இன்டர்வலுக்கு முன்னால ஒன்னு.. இன்டர்வலுக்கு பின்னால ஒன்னு.. நீதான் வரலைன்னு சொல்றியே..?”

அதற்கு அப்புறமும், படத்துக்கு வரமாட்டேன் என, நான் ஒரு மூச்சு விட்டிருப்பேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்..? ம்ஹூம்..!! அதான் சூடா ரெண்டு கிஸ் என்று என்னை அடித்து, ஃப்ளாட் ஆக்கிவிட்டாளே பாவி…? நாக்கைத் தொங்கப் போடாத குறையாக, அவளுடன் தியேட்டருக்கு சென்றேன். படத்தை எல்லாம் கவனிக்கவில்லை. எனக்கு அருகே கும்மென்று வாசனையாக இருந்த அபியைத்தான் கவனித்துக் கொண்டிருந்தேன்.

அபி என்னை ஏமாற்றவில்லை. படம் ஆரம்பித்து, பதினைந்தாவது நிமிடத்தில் அவள் வாக்குறுதியில் இருந்து ஒரு முத்தத்தை எனக்கு கொடுத்தாள். அவளுடைய முத்தம் தந்த போதையில் இருந்து மீள முடியாமல், நான் அவளுடைய தோள் மீது சாய்ந்து கொண்டேன். அவள் அணிந்திருந்த ஸ்லீவ்லஸ் டாப்ஸ், அவளுடைய செழுமையான, வெளுப்பான புஜத்தை பளீரென்று காட்டியது. நான் என் முகத்தை, அந்த புஜத்தில் வைத்து தேய்த்துக் கொண்டேன். வழுவழுவென்று இருந்தது. அபி அதற்கெல்லாம் ஒன்றும் சொல்லவில்லை. கொஞ்சம் ஓவர் மூடாகி, என் கையை அவளுடைய இடுப்பில் தவழ விட்டபோதுதான், என் மண்டையில் நறுக்கென்று குட்டினாள்.

இன்டர்வெல் வந்தது. வெளியே வந்தோம்.

“எனக்கு பாப்கார்னும் பெப்ஸியும் வாங்கு.. நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வர்றேன்..!!”

அபி சொல்லிவிட்டு பெண்கள் ரெஸ்ட் ரூம் பக்கம் செல்ல, நான் கும்பலில் அடித்துப் பிடித்து இரண்டு பாப்கார்ன், இரண்டு பெப்சி வாங்கினேன். எல்லாவற்றையும் கையில் பிடிக்க முடியாமல் பிடித்தபடி திரும்பிய நான், ஒரு வளர்ந்து கெட்டவனின் முகத்திலேயே முட்டிக் கொண்டேன். நிமிர்ந்து பார்த்தபோதுதான் தெரிந்தது.. அந்த வளர்ந்து கெட்டவன் வேறு யாரும் இல்லை.. சாட்சாத் அந்த சசி பரதேசிதான்..!! என்னைப் பார்த்ததும் ‘டொய்ங்ங்ங்..’ என்று கண்களை விரித்து அதிர்ச்சியானான். நானும்தான்..!!

“டேய்.. டிசன்ட்ரின்னு சொன்ன..? இங்க என்ன பண்ணிட்டு இருக்குற..?” அவன் கேட்க,

“அ..அது.. அ..அது…” என்று திணறுவதை தவிர என்னால் உருப்படியாக எதுவும் சொல்ல முடியவில்லை. அதற்குள்,

“என்னடா.. வாங்கிட்டியா..?”

என்று கேஷுவலாக கேட்டவாறு, இந்த அபி பிசாசும் அங்கே வந்து சேர்ந்தாள். தன் அண்ணனை பார்த்ததும் பக்கென்று அதிர்ச்சியானாள். ஓரிரு விநாடிகள்தான்.. அப்புறம் ‘ம்ஹ்ம்..’ என்று தலையை சிலுப்பியவாறு, முகத்தை அலட்சியமாக எங்கேயோ திருப்பிக் கொண்டாள். சசி எங்கள் இருவரையும் மாறி மாறி பார்த்து, ஒரு கேவலமான லுக் விட்டான். அப்புறம் ஓரக்கண்ணால் அவனுடைய தங்கையை பார்த்துக்கொண்டே, என்னிடம் நக்கலான குரலில் கேட்டான்.

“ஓஹோ.. இதுதான் அந்த டிசன்ட்ரியா..?”

அவனுடைய நக்கல் அபியை சூடாக்கியது.

“என்னது….????” என்று திரும்பி தன் அண்ணனை முறைத்தாள். அவன் கண்டுகொள்ளாமல் என்னிடம் சொன்னான்.

“ஏண்டா.. இவ கூட சேர்ந்து ஊர் சுத்தாதேன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன்..? அடங்க மாட்டியா நீ..?”

“இ..இல்லைடா மச்சான்.. நான் சொன்னேன்.. அபிதான்..” என்று நான் இழுக்க, இப்போது அபி தன் அண்ணனிடம் பொரிந்து தள்ளினாள்.

“இப்போ எதுக்கு அவனை மிரட்ற..? நாங்க ரெண்டு பெரும் ஊர் சுத்துனா.. உனக்கு என்ன எரியுது..?”

“இங்க பாரு.. நான் உன்கிட்ட பேசலை.. என் பிரண்ட்கிட்ட பேசுறேன்..!!” சசி தன் தங்கையை முறைத்தபடி சொன்னான்.

“ஏன்.. எங்கிட்ட பேசு..”

“உன்கிட்ட மனுஷன் பேச முடியாது..!!”

“மனுஷந்தான பேச முடியாது..? நீ பேசு..!!”

“ஓவரா பேசாதடி..!! வீட்ல ஸ்பெஷல் க்ளாஸ்னு பொய் சொல்லிட்டு.. இவன்கூட என்ன பண்ணிட்டு இருக்குற..?” என்று சசி உக்கிரமாக,

“நீ மட்டும்..? இன்டர்வியூன்னு சொல்லிட்டு.. இங்க என்ன பண்ணிட்டு இருக்குற..?” அபி அவனை மடக்கினாள். சசி திணறினான்.

“உனக்கு திமிரு ஜாஸ்தியாயிடுச்சுடி.. உன் லவ் மேட்டரை டாடிகிட்ட போட்டுக் குடுக்குறனா.. இல்லையா பாரு…” என்று என் வயிற்றில் புளி கரைத்தான். அபி சற்றும் அசரவில்லை.

“போ.. போய் போட்டுக்குடு.. நானும் போட்டுக் குடுக்குறேன்..!!” என்று அவனுக்கு பதிலடி கொடுத்தாள்.

“நீ என்ன போட்டுக் குடுப்ப..?”

“ம்ம்ம்.. நீ தம்மடிக்கிறது.. தண்ணியடிக்கிறது.. அப்புறம் காலேஜ் டூர் அப்போ.. கைல காசு வச்சுக்கிட்டு.. ப்ராஸ்டிட்யூட்டுக்காக அலைஞ்சது.. அதெல்லாம் நான் டாடிகிட்ட போட்டுக் குடுக்குறேன்..!!”

அபி கண்களை உருட்டி கோபமாக கத்த, சசி மிரண்டு போனான். அதிர்ச்சியாய் அவள் முகத்தையே கொஞ்ச நேரம் பார்த்தான். அப்புறம் அவன் முகம் கொஞ்சம் கொஞ்சமாய் கோபமாய் மாறியது. அந்த முகத்தை அப்படியே திருப்பி, என்னை முறைத்தான். நான் தலையை தொங்கப் போட்டுக் கொண்டேன். காரணம் இருக்கிறது. சசியின் இந்த சீக்ரட் எல்லாம் என் மூலம்தான் அபிக்கு போயிருக்கும் என்று அவன் புரிந்துகொண்டான் என்று எனக்கு புரிந்து போனது. தங்கையை அப்படியே வெறுப்பாக பார்த்த சசி, பின்பு பார்வையை விலக்காமலே என்னிடம் சொன்னான்.

“ஏண்டா.. இப்படி ஒருத்தி தேவையா உனக்கு..?” அவன் சொல்லி முடிக்கும் முன்பே,

“என்னது…???” என்று அபி ரவுத்திரமானாள்.

“முறைக்காத.. நான் இவன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்.. நீ உள்ள போறியா..?” என்றான் சசி.

“என்ன பேசப் போற..?”

“இது பசங்களுக்குள்ள மேட்டரு.. நீ கெளம்பு..!!”

சசி சொல்ல, அபி தன் அண்ணனையே கொஞ்ச நேரம் முறைத்தபடி நின்றிருந்தாள். அப்புறம் என் கையில் இருந்த, பாப்கார்ன் பெப்சி எல்லாம் வாங்கிக் கொண்டு, கடுகடுப்பான குரலில் என்னிடம் சொன்னாள்.

“படம் ஆரம்பிச்சுடுவான்.. சீக்கிரம் வந்து தொலை.. வளவளன்னு பேசிட்டு இருக்காத..”

அவள் அந்தப் பக்கம் நகர, சசி இந்தப் பக்கம் என் கையை பிடித்து இழுத்து சென்றான். தியேட்டரின் பக்கவாட்டில் நடந்து சென்று அங்கே இருந்த கதவை திறந்து வெளியேற, திறந்த வெளியில் தம்மடித்துக்கொண்டு அங்கு ஒரு கூட்டமே நின்றிருந்தது. சசி பாக்கெட்டில் இருந்த கிங்க்ஸ் பாக்கெட்டை எடுத்து என்னிடம் நீட்டினான். நான் பதறினேன்.

“வேணாம் மச்சான்.. அபிக்கு தெரிஞ்சா அடிப்பா…!!” என நான் மறுக்க, அவன் கடுப்பானான்.

“ஏய்.. ச்சீய்.. எடு.. பொட்டச்சிக்குலாம் போய் பயந்துக்கிட்டு..”

நான் தயங்கி தயங்கி ஒரு தம் எடுத்து வாயில் வைத்துக் கொண்டேன். சசியும் தன் வாயில் ஒரு தம்மை பொருத்திக்கொண்டு, இரண்டு பேருக்கும் பற்ற வைத்தான். கண்களை லேசாக செருகி, புகையை வெளியே ஊதிக்கொண்டே கேட்டான்.

“நான் ஏன் உன்னை என் தங்கச்சி கூட ஊர் சுத்தக் கூடாதுன்னு சொல்றேன் தெரியுமா..?”

“புரியுது மச்சான்.. நாலு பேர் பார்ப்பாங்க.. உங்க குடும்ப மானம் போகும்..!!”

“நாலு பேர் பார்ப்பாங்கன்றது சரி.. ஆனா குடும்ப மானத்துக்காக இல்லை..!!”

“அப்புறம்..???” நான் குழப்பமாக கேட்க,

“நாளைக்கு நீ என் தங்கச்சியை கழட்டி விடுறது கஷ்டமாயிடும்..” என்று அவன் கூலாக சொன்னான்.

“என்னடா மச்சான் சொல்ற..?”

“சீரியசாத்தாண்டா சொல்றேன்.. சீக்கிரம் அவளை கழட்டி விடுற வழியைப் பாரு.. கூடப் பொறந்த அண்ணன் கூட எப்படி மல்லுக் கட்டிட்டு நிக்குறா பாத்தியா..? இப்படிப்பட்ட அடங்காபிடாரி உனக்கு தேவையா..?”

“ச்சே.. ச்சே.. அபியை அப்படிலாம் சொல்லாதடா.. ரொம்ப நல்ல பொண்ணு…!!”

“அடி செருப்பால.. நல்ல பொண்ணாம்ல..? அழகா இருக்குறான்றதை தவிர, வேற என்னடா குவாலிபிகேஷன் இருக்கு அவகிட்ட..? அப்பா…!!! இவ மாதிரி ஒரு டெரர்ர்ர்ரான கேரக்டரை நான் பாத்ததே இல்லை..!!”

“இருக்கலாண்டா.. ஆனா என்னை சின்சியரா லவ் பண்றா..!!”

“கிழிச்சா..!! அவ ஏன் உன்னை லவ் பண்றா தெரியுமா..? அவ சொன்னதுக்குலாம் நீதான் பூம் பூம் மாடு மாதிரி.. நல்லா தலையை ஆட்டுவ..!! மத்தபடி உன்மேல ஒன்னும் தெய்வீக லவ்வுலாம் கிடையாது..!!”

“என்னடா.. என்னென்னவோ சொல்ற..?” எனக்கு வயிற்றில் புளி கரைப்பது மாதிரி இருந்தது.

“மச்சான்.. எல்லாம் உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்.. இப்போவே உஷார் ஆயிக்கோ..!! இவளை மட்டும் கட்டிக்கிட்டேன்னு வச்சுக்கோ.. நல்லா பளபளன்னு எவர்சில்வர்ல ஒரு கூஜா வாங்கிக் கொடுப்பா.. அதை தூக்கிக்கிட்டு.. இவ பின்னாலேயே திரிய வேண்டியதுதான்.. உன் லைஃபே நாசமாப் போயிடும்..!!”

“நெஜமாவாடா..?”

“ஆமாண்டா.. சொல்றதை கேளு.. கழட்டி விட்ரு.. நமக்கென்ன மச்சான்.. பொண்ணா கிடைக்காது..? நம்ம ரேஞ்சுக்கு எல்லாம் க்யூல நிப்பாளுகடா.. நான் சொல்றதை சொல்லிட்டேன்.. அப்புறம் உன் இஷ்டம்.. நல்லா யோசிச்சுக்கோ.. கழட்டிவிட ஐடியா வேணும்னா.. எங்கிட்ட வா.. எப்படி நேக்கா கழட்டி விடுறதுன்னு.. நான் ப்ளான் போட்டுத் தர்றேன்.. சரியா..?”

சசி அதே ரேஞ்சில் ஒரு பத்து நிமிடம் பேசினான். என்னை நன்றாக குழப்பி விட்டான். அவன் சொல்வதிலும் உண்மை இருக்குமோ என்று யோசனை ஓடியது. அப்புறம் நான் ரெஸ்ட் ரூம் போய், நன்றாக வாயை கொப்புளித்து, பபுள்கம் போட்டுக்கொண்டு, நல்ல பிள்ளையாய் அபியின் பக்கத்தில் சென்று அமர்ந்தேன். அவள் என்னுடைய பாப்கார்னையும், பெப்சியையும் என் கையில் திணித்தவாறே, ரகசியமான குரலில் கேட்டாள்.

“என்ன பேசுனீங்க ரெண்டு பேரும்..?”

“ஒன்னும் இல்லையே..?”

“நடிக்காத.. தனியா கூட்டிட்டு போய் கால் மணி நேரம் பேசியிருக்கான்.. என்னைப் பத்தித்தான் ஏதாவது சொல்லியிருப்பான்.. என்ன சொன்னான்.. சொல்லு..?”

“அவன் கெடக்குறான் விடு அபி..”

“இப்ப சொல்லப் போறியா இல்லையா..?”

“அவன் ஏதாவது சொல்லுவான்.. நமக்கெதுக்கு அபி..? தேவையில்லாதது..!!”

“தேவையா இல்லையான்னு நான் டிஸைட் பண்ணிக்கிறேன்.. நீ மேட்டரை மட்டும் சொல்லு..!!” அபி கொக்கிப்பிடியாய் கேட்க, நான் அவஸ்தையில் நெளிந்தேன்.

“அது.. அது…”

“என்ன பொய் சொல்லலாம்னு யோசிக்காத.. மவனே.. உண்மையை சொல்லு..!!”

“அவன்.. அவன்.. உன்னை…”

“ம்ம்.. என்னை…?”

“உ..உன்னை கழட்டி விட சொல்றான் அபி..!!” என்று உளறிக் கொட்டினேன். அபி கொஞ்ச நேரம் என் முகத்தையே அமைதியாக பார்த்தாள். அப்புறம் கிண்டலான குரலில் கேட்டாள்.

“எதுக்காம்..?”

“நீ.. நீ…”

“ம்ம்.. சொல்லு..”

“நீ அடங்காப் பிடாரியாம்.. வாயாடியாம்.. உன்னை கட்டிக்கிட்டா வாழ்க்கையே நாசமா போயிடுமாம்..!!”

“அப்டின்னு அந்த லூசு சொல்லிச்சா..? சரி அதை விடு.. அதுக்கு நீ என்ன சொன்ன..?”

“நான்.. நான்.. ஒன்னும் சொல்லலை.. அப்டியே சிரிச்சிட்டே வந்துட்டேன்..!!”

நான் சொல்லி முடிக்கும் முன்பே, அபி என் தொடையைப் பிடித்து ‘முறுக்கக்..’ என்று திருகினாள். சுள்ளென்று உயிர் போவது மாதிரி வலிக்க, நான் துடித்தேன். ‘ஆஆஆ…’ என்று கத்திவிட்டேன். பக்கத்து சீட்டில் இருந்தவன் பரிதாபமாக என்னை திரும்பி பார்த்தான். நான் கோபமாக, கிசுகிசுப்பாக அபியிடம் கேட்டேன்.

“ஏண்டி கிள்ளுற.. வலிக்குது..!! அம்மா…!!!”

“கிள்ளாம..? அவன் உளறுனானாம்.. இவரு ஈஈஈஈ ன்னு இளிச்சுட்டு வந்தாராம்.. ‘நான் அபியைத்தான் லவ் பண்றேன்.. அவளைத்தான் கட்டிப்பேன்னு..’ அவன் மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்றதுக்கு என்ன..? ம்ம்ம்…? இரு.. படம் முடியட்டும்.. உன்னை வச்சுக்குறேன்..!!”

அவள் கோபமாக சொல்லிவிட்டு, திரை மீது பார்வையை வீசினாள். நான் கொஞ்ச நேரம் என் தொடையை தடவிக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். இப்படி அண்ணனிடமும், தங்கையிடமும் மாட்டிக்கொண்டு படாதபாடு படுகிறோமே என்று, கவலையாக இருந்தது. பாப்கார்ன், பெப்ஸி சாப்பிட்டேன். புரியாவிட்டாலும் நானும் கொஞ்ச நேரம் படம் பார்த்தேன். அப்புறம் அது நினைவுக்கு வந்தது. நைசாக அபியின் புஜத்தை சுரண்டினேன்.

“அபி…!!”

“ம்ம்…?”

“இன்டர்வெலுக்கு அப்புறம் இன்னொன்னு தர்றேன்னு சொன்னியே..? தரலை..?”

“ம்ம்ம்.. தரலாம்னுதான் நெனைச்சேன்.. ஷூ மாட்டிட்டு வந்துட்டமேன்னு யோசிக்கிறேன்.. செருப்பு மாட்டிட்டு வந்திருந்தா.. வசதியா இருந்திருக்கும்..!!”

அவ்வளவுதான்..!! அப்புறம் நான் வாயை இறுக்கி மூடிக்கொண்டேன். அவள் உச்சபட்ச கோபத்தில் இருக்கிறாள் என்று தெளிவாக எனக்கு புரிந்து போனது. மூச்சு விடவில்லை.

படம் முடிந்து வெளியே வந்தோம். நான் பைக்கை எடுக்க பார்க்கிங் ஏரியா செல்ல, அபி என்னை பின் தொடர்ந்தாள். நான் எந்திரம் மாதிரி பைக்கை வெளியே எடுத்து ஸ்டார்ட் செய்ய, அபி அமைதியாக பின்னால் ஏறி அமர்ந்தாள். கிளம்பப்போகும்போது, அந்த படுபாவி சசி எதிரே வந்தான். ஒரு கையால் பைக்கை முன்னால் கை வைத்து தடுத்தபடி நக்கலாக கேட்டான்.

“அடுத்து எங்க…?”

இப்போது அபி தன் அண்ணனை பார்த்து ஆத்திரமாக சீறினாள்.

“எங்க போனா உனக்கு என்ன..? மூடிட்டு போ..!!”

அவள் கத்தியதை கேட்டு சசி மட்டும் இல்லை, நானும் அரண்டு போனேன். ஆக்சிலரேட்டரை ‘கிர்ர்ர்ர்…’ என்று முறுக்கினேன். தியேட்டரை விட்டு, மெயின் ரோட்டில் ஏறி வண்டியை செலுத்தினேன். எங்கே செல்வது என்றே தெரியவில்லை. சொன்னால்தானே..? ஆத்திரமாக வேறு இருக்கிறாள்..!! கேட்கலாமா..? வேண்டாமா..? வேறு வழியில்லாமல், மனதை திடப் படுத்திக் கொண்டு, தயங்கி தயங்கி கேட்டேன்.

“எ..எங்க போறது அபி..?”

“ரூமுக்கு போ..!!” பட்டென்று பதில் வந்தது.

“எ..எந்த ரூமுக்கு..?”

“ம்ம்ம்.. உன் ரூமுக்குத்தான்..!!”

“எதுக்கு..?”

“போன்னு சொன்னா போ..!!”

பிசாசு..!! ராட்சசி..!! தேள் கொடுக்குக்கு பொறந்தவ..!! இவளை கட்டிக்கிட்டு நான் என்ன கஷ்டம்லாம் அனுபவிக்கப் போறேனோ..? வண்டியை என் ரூம் நோக்கி விட்டேன். ஒரு பதினைந்து நிமிடத்தில் என் ரூமை அடைந்தோம். உள்ளே நுழைந்த அபி, என் ரூம் இருந்த நிலையை பார்த்துவிட்டு முகத்தை சுளித்தாள். ரூமை சுற்றி சுற்றி ஒரு கேவலமான பார்வை பார்த்தவள்,

“என்னடா.. ரூமை இவ்வளவு நாஸ்டியா வச்சிருக்க..?” என்றாள்.

“நீ வருவேன்னு எனக்கு தெரியுமா..? தெரிஞ்சிருந்தா கொஞ்சம் கிளீன் பண்ணிருப்பேன்..!!”

அபி மெல்ல நடந்து சென்று தன் ஷோல்டர் பேக்கை கழட்டி டேபிள் மீது வைத்தாள். திரும்பி என்னை ஒரு மாதிரி ஏற இறங்க பார்த்தாள். அவள் மனதில் என்ன நினைத்து வந்திருக்கிறாள் என்று இன்னும் எனக்கு விளங்கவில்லை. குழப்பமாக கேட்டேன்.

“எதுக்கு அபி திடீர்னு என் ரூமை பாக்கனும்னு ஆசை..?”

“சொல்றேன்..”

என்றவள் என்னை நெருங்கினாள். என் கன்னத்தில் கைவைத்து தடவினாள். பின்பு மார்பில். அப்புறம் கொஞ்சம் கிறக்கமான குரலில் சொன்னாள்.

“ஷர்ட்டை கழட்டு அசோக்..!!”

“எதுக்கு..?”

“கழட்டுன்றேன்ல.. கழட்டு..!!” சொன்னவள் என் சட்டை பட்டனில் கைவைத்து கழட்ட முயன்றாள்.

“ஐயோ.. என்ன அபி இது..? உள்ள பனியன் கூட போடலை..!!” என்று நான் துள்ளினேன்.

“வசதியாப் போச்சு.. கழட்டு..!!”

சொல்லிக்கொண்டே முதல் பட்டனை அவளே கழட்டினாள். எதோ திட்டத்துடன்தான் வந்திருக்கிறாள் என்பது மட்டும் தெளிவாக தெரிந்தது. என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் என தோன்றியது. மற்ற பட்டன்களை நானே கழட்டினேன். அவள் சட்டையை பிடித்து இழுத்து, என் கை வழியாக உருவி, தூக்கி எறிந்தாள். ஓரிரு வினாடிகள் என் வெற்று மார்பையே வெறித்தாள். கை வைத்து என் மார்புத் திரட்சியை தடவிக் கொடுத்தாள்.

“எதுக்கு சட்டையை கழட்ட சொன்ன..?”

“சொல்றேன் இரு.. வா..!!”

என்றவள் என்னுடைய கையை பிடித்து இழுத்து, கட்டிலுக்கு அழைத்து சென்றாள். என் தோளை பிடித்து அமுக்கியவாறு சொன்னாள்.

“ம்ம்.. படுத்துக்கோ..!!”

நான் எதுவும் புரியாமலேயே, மெல்ல மெத்தையில் சாய்ந்தேன். அபியை ஏறிட்டேன். அபியிடம் இருந்து நான் அதை எதிர்பார்க்கவே இல்லை. பட்டென்று தன் டாப்ஸை கழட்டி வீசினாள். ப்ராவுக்குள் திமிறிக்கொண்டு நிற்கும் பந்துகளோடு, படு கவர்ச்சியாக என் முன்னால் நின்றிருந்தாள். நான் அதிர்ந்து போனேன். கண்கள் ரெண்டும் வெளியே பிதுங்கி விழுந்துவிடும் அளவுக்கு, இமைகளை விரித்து அவளுடைய அரை நிர்வாண அழகை பார்த்தேன். நாக்கு உலர்ந்து போனவனாய் கேட்டேன்.

“அ..அபி.. எ..என்ன இது..? என்ன பண்ற நீ..?”

“கொஞ்சம் தள்ளிப்படு..!!”

நான் தயங்கி தயங்கி தள்ளிப் படுக்க, அவள் கேஷுவலாக வந்து எனக்கு அருகே படுத்துக் கொண்டாள். என்னுடைய ஒரு கையை எடுத்து அவளுடைய தோளை சுற்றிப் போட்டுக் கொண்டாள். என் முகத்தோடு அவளுடைய முகத்தை இணைத்துக் கொண்டாள். அவளுடைய பேன்ட் பாக்கெட்டில் இருந்து, செல்போனை உருவி எடுத்தாள். கேமரா ஆன் செய்து, எங்களை படம் பிடித்துக் கொண்டாள். அவள் அந்த மாதிரி கோலத்தில் என் அருகில் கிடந்த போதை தெளியாமலே நான் கேட்டேன்.

“எதுக்கு போட்டோ எடுக்குற அபி..?”

“ச்சும்மாதான்..!!”

எந்த கடையில் சென்ட் வாங்குகிறாளோ..? அபியிடம் இருந்து அப்படி ஒரு வாசனை கும்மென்று வந்தது. அந்த வாசனை என் மூளை முடுக்குகளில் எல்லாம் ஏறி, காம நரம்புகளை கண்டுபிடித்து முறுக்கேற செய்தது. எனது ஆண்மை மெல்ல மெல்ல விறைக்க ஆரம்பித்தது. நடப்பதெல்லாம் நிஜம்தானா..? கனவில்லையே..? என் அழகு தேவதையுடன், இப்படி அரை நிர்வாணமாய் ஒரே கட்டிலில் படுத்திருக்கிறேனே..? உண்மைதானா..? நான் காமம் பொங்கும் கண்களோடு அபியையே பார்த்தேன்.

உடம்பை எப்படி நச்சென்று வைத்திருக்கிறாள்..? அவளுடைய மார்பு எப்படி வீங்கியிருக்கிறது..? இவ்வளவு பெரிய கனிகளா இவளுக்கு..? இத்தனை நாளாய் தெரியவில்லை. இப்போது ப்ராவுடன் பார்க்கும்போதுதான் முழு வடிவம் தெரிகிறது. பெரிது மட்டும் இல்லை.. எப்படி கெட்டியாக திரண்டு நிற்கிறது..? ப்ராவை முட்டிக்கொண்டு..!! லேசாக கூட சரியாமல் குத்திட்டு நிற்கிறதே..? கொஞ்சம் கூட எக்ஸ்ட்ரா சதை இல்லாமல், என்ன ஒரு குழைவான இடுப்பு இவளுக்கு..? வெண்ணை பூசியது மாதிரி வழவழவென்று..!! அந்த குட்டித் தொப்புள் குழிதான் எவ்வளவு செக்ஸியாக இருக்கிறது..?

நான் என்னுடைய கையை எடுத்து அவளுடைய இடுப்பில் வைத்து தடவினேன். அபி அதையும் படம் எடுத்துக் கொண்டாள்.

“கன்னத்துல கிஸ் பண்ணு அசோக்..!!”

அபி மெல்லிய குரலில் சொல்ல, நான் அதிசயித்தேன். என் செல்லக்குட்டிக்கு என் மேல் இவ்வளவு ஆசையா..? நான் ஆர்வமாக அவளுடைய கன்னத்தில் என் உதடுகளை ஒற்றி எடுத்தேன். மீண்டும் கேமராவில் இருந்து ஒரு பளிச்..!!

“இங்க கை வச்சுக்கோ அசோக்..!!”

சொன்ன அபி என் வலது கையை எடுத்து, தன் மார்பு உருண்டைகள் வீங்க ஆரம்பித்த இடத்தில் வைத்துக் கொண்டாள். நான் ஆசையாக அவளுடைய மார்பு ஆரம்பித்த இடத்தை தடவ, அதை ஒரு முறை செல்போனால் கிளிக்கிக் கொண்டாள். அவளுடைய மார்பு மெத்தென்று மென்மையாக இருந்தது. சாஃப்டான சதைகளால் செய்து வைத்த உருண்டைகள். என்னால் அதற்கு மேலும் ஆசையை அடக்க முடியவில்லை. அபியின் ஒருபக்க முலையை கொத்தாகப் பிடித்து, அழுத்தி பிழிந்தேன். அவ்வளவுதான்..!!

“ச்ச்சை…!! கருமம்..!!”

என்று கத்தியவாறு அபி துள்ளிக்கொண்டு கட்டிலில் இருந்து எழுந்தாள். இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்தவாறு, என்னையே முறைத்துப் பார்த்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. குழப்பமாக கேட்டேன்.

“என்ன ஆச்சு அபி..?”

“யூ.. யூ… டர்ட்டி மைண்டட் மங்க்கி.. அதை எதுக்கு புடிச்சு பெசயுற..?”

“என்ன சொல்ற அபி.. நீதான டிரஸ் கழட்டிட்டு வந்து.. பக்கத்துல படுத்த..?”

“அ..அது.. அது சும்மா போட்டோ எடுக்குறதுக்கு..!!”

“போட்டோவா..? என்ன போட்டோ..?”

“நாம ஒண்ணா இருக்குற போட்டோ..!!”

“எதுக்கு..?”

“என் சேஃப்டிக்கு..!!”

“என்ன உளர்ற..? எதுக்கு சேஃப்டி..?”

“நாளைக்கு நீ பாட்டுக்கு.. என் அண்ணன் சொன்ன மாதிரி.. என்னை கழட்டி விட்டுட்டேனா..? எனக்கு ஒரு சேஃப்டி வேணாமா..? அதான் போட்டோ எடுத்து வச்சுக்கிட்டேன்..!!”

“என்ன அபி நீ..? நான் அப்படிலாம் பண்ணுவேனா..? என் மேல நம்பிக்கை இல்லையா..?”

“இல்லை..!! உன்னைக் கூட நம்பலாம்.. என் அண்ணனை நம்பவே முடியாது.. அவன் நாலு தடவை உனக்கு தண்ணி வாங்கிக் கொடுத்து.. ‘கழட்டி விடு.. கழட்டி விடு..’ன்னு சொன்னா.. நீ மாறினாலும் மாறிருவ..!!”

“ச்சே.. ச்சே.. நான் அப்டிலாம் பண்ண மாட்டேன் அபி..!! எனக்கு கடைசி வரைக்கும் நீதான்.. போதுமா..?”

நான் செண்டிமெண்டாக சொல்ல, அபி என் முகத்தையே கொஞ்ச நேரம் அமைதியாக பார்த்தாள். அப்புறம் கொஞ்சம் ஏளனமான குரலில் சொன்னாள்.

Scroll to Top