கையாளாகாத ஒருவனின் மனைவி

இந்தக் காலம் நம்மை நொடிபொழுதில் புரட்டி போட்டுவிடும். நாம் கூழங்கல்லாய் இருந்தால் ஒன்றுமில்லை. எத்தனை முறை காலம் நம்மை புரட்டி போட்டாலும், உருண்டு உருண்டு மெருகேறிக் கொள்வோம். ஆனால் நாம் ஆமைகள். ஒரு முறை புரட்டிப் போட்டால் மல்லாக்காக விழுந்து வானத்தில் நம்மை சுற்றும் கழுகினைப் பார்த்து அது எப்போது தரை இறங்கி நம்மை உண்ணுமோ என்ற பயத்தில் காலத்தினைக் கழிக்க வேண்டிருக்கும். நம்மைப் போல நடுத்தர வர்க்கத்தின் இழிவுகளை சுமந்து செல்லும் ராக்கி எனும் ராக்காயின் கதை இது. இந்தக்கதையில் காமம் கொஞ்சம் இருக்கும். அதனோடு நம்மின் நிலையும் இருக்கும். எனது புதிய கதைக்கு வரவேற்கிறேன்.

“என்னைய இப்படி ஆறு மாசமா இழுத்தடிக்கிறீங்களே… உங்களுக்கே அநியாயமா தெரியலையா?.. “ என்றபடி அவர்களைப் பார்த்தாள் ராக்கி. அந்த அதிகாரி திமிராக எதுவுமே நடக்காதது போல எதுவுமே காதில் விழாதது போல நகர்ந்தார். “ஐயா.. நீங்க நல்லாயிருக்க மாட்டீங்க. உங்க புள்ளகுட்டி விளங்காமப்போயிரும். என் புருஷன் செத்த இடம் புல் முளைச்சுப்போயிருச்சு. இன்னும் என்னைய அலையவிடுறீங்களே… வயிறெரிஞ்சு சொல்றேன், என் சாபம் உங்களைச் சும்மா விடாது.’’ என ராக்கி கத்திப் பார்த்தாள்.

அது காட்டுப்புத்தூரின் வருவாய்த் துறை அலுவலகம். அங்கிருக்கும் ஆட்கள் பிணத்தின் மீது இருக்கும் ஒரு ரூபாயையும் எடுத்துக் கொள்ளும் நல்ல மனிதர்கள். ராக்கியின் சாபத்தினைக் கேட்டு அலுவலகத்துக்குள் யாரோ சிரித்தார்கள். அந்த சிரிப்புக்குப் பின்பு “சாபமெல்லாம் வெளியே போய்க் குடு. இங்க நின்னு கத்தக் கூடாது” என ஒருவர் அவளை வெளியேற்றினார். ராக்கி செய்வது அறியாது அங்கிருந்த மரத்தில் நிழலில் நின்று கொண்டிருந்தாள். அவளுக்கென்று ஆதரவாக வீட்டில் கூட யாருமில்லை. ராக்கிக்கென தனி அழகுண்டு. இன்றைய வெள்ளைத் தோல் பல்லிகளைப் போல இருப்பவர்களை எல்லாம் அழகிகள் என மக்களிடையே பரப்பிவிட்டார்கள். ஆனால் அவள் மாநிறத்தில் கொஞ்சம் பூசினாற்போல இருப்பவள். அவளுடைய பற்கள் கூட வயல்வெளியின் கரையோரம் நடப்பட்ட சவுண்டல் போல நேராக இருந்தன. வட்ட முகத்தில் பொட்டின்றி வெளிறிப் போயிருந்தன. கணவனை இழந்த சோகமும், அரசு துறைகள் கொடுக்கும் அயற்சியும் அவளுடைய முகத்தில் குடி கொண்டிருந்தன. ஆனால் பச்சை நிற புடவையில் ஆங்காங்கு சிறிய பூக்கள் சிரித்துக் கொண்டிருந்தன. வயல்வெளியில் உழைத்து உழைத்து இறுகியிருந்த அவளுடைய உடலினை அங்கிருந்த செல்வம் என்கிற செல்வநாயகம் கவனித்தார். அவருடைய பார்வையில் ராக்கியின் மார்பை அளந்தார். முப்பத்தி ஆறு இருக்கும். இறுக்கிய அவள் ரவுக்கியில் அது சிறியதுபோல தோன்றுகிறது. அவளுடைய சேலையின் நடுவே இடுப்பை கவனித்தார். அது கருப்பு தேக்கில் வார்னிஸ் பண்ணியது போல ஒரு மினுமினுப்போடு இருந்தது. மெதுவாக அவளுடைய நிர்வாணத்தை நினைத்துப் பார்த்தார். அப்பா… இவள் ரம்பை போல இருப்பாள் என்று நினைத்துக் கொண்டார்.

“எதுக்குமா இங்க நின்னுக்கிட்டு இருக்க.. என்ன வேணும் உனக்கு.” என்று செல்வநாயகம் அவளை அணுகி கேட்டார். விவசாயி இறந்தால் ஐம்பதாயிரம் கொடுப்போம் என்று எடப்பாடி பழனிசாமி என்றோ அறிவித்திருந்த ஒரு செய்தியையும், அதை ஊரில் ஒருவர் இவளிடம் சொல்லி அந்த நிதியை வாங்கி பயன்படுத்திக் கொள்ள வருவாய் துறை அலுவலகத்திற்கு செல்லும்படி தெரிவித்ததையும் கூறி அழுதாள். “அட.. அழுவாதேம்மா.. அரசாங்க அலுவகத்துக்குள்ள இப்பவெல்லாம் நேரடியாக நுழைய முடியாது. வேலைக்கு ஆகாது. என்கூட வா.. உனக்கு அந்தப் பணத்தை வாங்கி தாரேன்.” என்றார். ராக்கிக்கு பெரிய ஆதரவாக தோன்றியது. திக்கில்லாமல் மாட்டிக் கொண்ட காட்டில் நாயொன்று வந்து வழிகாட்டி சாலையில் விடுவதைப் போல ஒரு ஆசுவாசம் தோன்றியது.

ஆனால் நமக்குதானே தெரியும்… கையாளாகாத விவசாயின் ஒருவனின் மனைவியாக இருந்த ராக்கி இனி எப்படி ஆகப்போகிறாள் என..

செல்வநாயகம் முன்னே செல்ல அவருக்கு பின்பாக ராக்கி சென்றாள். செல்வநாயகம் சாலையைக் கடந்து எதிரே இருந்த டீ கடையில் இருந்து இரண்டொருவரை கண்டு வணக்கம் தெரிவித்தார். அவர்களும் வணக்கம் தெரிவித்தனர். அவர்களிடையே ராக்கியை காட்டி அவளைப் பற்றி பேசினார். ராக்கிக்கு அவர் பேசுவதன் மூலம் மேலும் நம்பிக்கை அதிகமானது. ஏதோ சில விசயங்கள் அவளுக்கு புரிவது போலவும் புரியாதது போலவும் இருந்தன. செல்வநாயகம் பேசிக் கொண்டிருந்தவர்களில் ஒருவன் ராக்கியை மேலிருந்து கீழாக பார்த்துவிட்டு ம்ம்… என பெருமூச்சு விட்டான்.

“செல்வா சார்.. டீ சாப்படறீங்களா” என்று ஒருத்தன் கேட்க. “வேணாம்பா.. மதியமே ஆகப் போகுது. இப்ப டீ சாப்பிட்டா.. சாப்பாடு சாப்பிட முடியாது” என்றார் செல்வநாயகம்.
“அதுசரிதான். வேளா வேளைக்கு சாப்பிட நாங்க என்ன உங்களை மாதிரியா கவர்மெண்ட் சாப்பாடு சாப்படறோம். ஏதோவது கிராக்கி வந்தாதான்” என்றான் வேறொருவன். செல்வநாயகம் அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு ஒரு ஜெராக்ஸ் கடையில் சில ஜெராக்ஸ் செய்யப்பட்ட தாள்களை கேட்டு வாங்கினார். “எவ்வளவுப்பா ஆச்சு”
“பத்திரம் மூணு, ஸ்டாம்ப் தாள் ஆறு. மொத்தம் இருபத்தி ஏழு சார்”
செல்வநாயகம் பின்னால் திரும்பி ராக்கியிடம் “இருபத்தி ஏழு ரூபா இவர்கிட்ட தாமா” என்றார். ராக்கி தன்னுடைய கையை சேலைக்குள் விட்டாள். தொப்புளுக்கு இடப்பக்கமாக பாவடையில் சொறுகியிருந்த சுருக்குப் பையை வயிற்று கொஞ்சம் உள்ளுக்குள் இழுத்து எடுத்தாள். அதனைத் திறந்த கந்தலாகி இருந்த ஒரு இருபது ரூபையை நீட்டிவிட்டு. சுருக்குப் பைக்குள் சில்லறைகளை தேடிக் கொண்டிருந்தாள். அவளுடைய சுருக்குப் பையில் இரண்டொரு காசுகள் மட்டுமே மீதமிருந்தன என்பதை செல்வநாதன் புரிந்து கொண்டார்.

“ஏம்மா.. உன் புருசனோட ஆதார்கார்டு, உன்னோட ஆதார்கார்டு, அப்புறம் ரேசன்கார்டு.. இதோட ஜெராக்செல்லாம் இருக்கா” என்று கேட்டார். ராக்கி சுருக்குப் பைக்குள் காசுகளை தேடுவதை விட்டுவிட்டு அவரைப் பார்த்து விழித்தாள். “அட என்னம்மா.. ஒரிஜினலாவது இருக்கா” என்று கேட்டார்.
“அதெல்லாம் வீட்டுல இருக்குங்க..” என்று இழுத்தாள்.
“சரியாப் போச்சு. “ என்று அவளிடம் சொல்லிவிட்டு அவருடைய பையிலிருந்து ஐம்பது ரூபாயை எடுத்து கடைக்கார பையனிடம் கொடுத்து ஜெராக்சையும், ஸ்டேம்பையும் சில்லறையும் வாங்கிக் கொண்டு..
“இதோ பாரும்மா ராக்கி.. எப்ப அரசாங்க வேலையா வந்தாலும், நம்ம கிட்ட இருக்கிற அத்தனை கார்டையும் கொண்டுவந்திடனும், சரி இன்னைக்கு வேலைக்கு ஆகாது. சாப்பிட்டுட்டு நீ ஊர்க்கு கிளம்பிடு..”
“ஆமா.. உங்க ஊருக்கு இப்ப பேருந்து இருக்காதே.. கையில காசும் இல்லை. எப்படி சாப்பிடுவ..” ராக்கியை முழுவதுமாக அவருக்காகவே ஆண்டவன் அனுப்பியது போல இருந்தது. ராக்கி என்ன சொல்வது என்று தெரியாமல் மௌனமாக இருந்தாள். இப்போது பேருந்துக்கு கூட காசில்லாமல் சாமிக்கு போட்டிருந்த ஒரு மஞ்சள் முடிச்சினை அவிழ்த்துதான் அந்தக் காசை எடுத்து வந்திருந்தாள்

“ஆபிசுல அத்தனை சத்தம் போட்ட பொண்ணா இதுனு தோனுது. பணமில்லைதான் ஒரு பைய உன்னை கண்டுக்காம விட்டிருக்கான். சரி என்கூட வா.” என்று சொல்லிவிட்டு இன்னும் சில அடி தூரம் நடந்து ஒரு சந்தின் பக்கம் திரும்பினார். அவள் பின்னே நடந்து போன ராக்கிக்கு அந்த சந்துப் பகுதி ஆட்கள் நடமாட்டமே இல்லாமல் இருப்பது வியப்பாக இருந்தது. செல்வநாயகம் அந்த சந்திலிருந்த ஒரு சிறிய வீட்டின் முன்வாசல் கதவை திறந்து.. “இதுதாம்மா என் வீடு. நாளைக்கு காலையில எட்டு மணிக்கே இங்க வந்திடு.. “ என்று சொல்லிவிட்டு சட்டைப் பையிலிருந்த ஒரு ஐம்பது ரூபாய் தாளை அவளிடம் நீட்டி.. “சாப்பாட்டுக்கும் பேருந்து செலவுக்கும் வைச்சுக்கோ.” என்று தந்தார்.

ராக்கிக்கு செல்வநாயக்த்தை பார்க்கும் போது அவள் கும்பிடும் குன்னிமரத்தானே இறங்கி வந்தது போல இருந்தது. “சார்.. “ என்று தயங்கினாள்.
“வாங்கிக்கோமா. தயங்காம வாங்கிக்கோ.. “ என்றார். ராக்கி அவரிடம் பணத்தாளை வாங்கிக் கொண்டு வாசலில் இருந்து விடைபெற.. அவளுடைய பின்னழகை பார்த்துக் கொண்டே நின்றிருந்தார் செல்வநாயகம்.

Scroll to Top